<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>உலகின் புதிய கடவுள்</title>
	<atom:link href="http://holyox.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://holyox.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Fri, 31 Aug 2007 00:42:02 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='holyox.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>உலகின் புதிய கடவுள்</title>
		<link>http://holyox.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://holyox.wordpress.com/osd.xml" title="உலகின் புதிய கடவுள்" />
	<atom:link rel='hub' href='http://holyox.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>Peace of Civilizations</title>
		<link>http://holyox.wordpress.com/2007/08/31/peace-of-civilizations/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/08/31/peace-of-civilizations/#comments</comments>
		<pubDate>Fri, 31 Aug 2007 00:42:02 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/08/31/peace-of-civilizations/</guid>
		<description><![CDATA[Peace of Civilizations ராபின்சன் க்ரூசோ (1997) என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.நாவலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? டேனியல் ஃடீபோவின் ராபின்சன் க்ரூசோ (1719) நாவல் வெள்ளை இனம் உலக ஆதிக்கம் பெற துவங்கியிருந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல்.ராணுவம், கலாச்சாரம்,விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பிரிட்டன் கொடிகட்டி பறந்த காலம்.உலகெங்கும் சென்று தேசங்களை பிடித்து, மற்ற இனங்களையும், கலாச்சாரங்களையும் வென்று அதன் வளங்களை பிரிட்டனின் நலனுக்கு பயன்படுத்தும் மனோபாவம் நிலவிய காலம். அந்த காலக்கட்டத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=44&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h3 class="post-title"><a href="http://holyox.blogspot.com/2007/08/peace-of-civilizations.html">Peace of Civilizations</a></h3>
<p class="post-body"><a href="http://www.films.pierre-marteau.com/bilder/crusoe96_2.jpg"><img border="0" src="http://www.films.pierre-marteau.com/bilder/crusoe96_2.jpg" style="float:left;width:200px;cursor:hand;margin:0 10px 10px 0;" /></a></p>
<p>ராபின்சன் க்ரூசோ (1997) என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.நாவலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்?</p>
<p>டேனியல் ஃடீபோவின் ராபின்சன் க்ரூசோ (1719) நாவல் வெள்ளை இனம் உலக ஆதிக்கம் பெற துவங்கியிருந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல்.ராணுவம், கலாச்சாரம்,விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பிரிட்டன் கொடிகட்டி பறந்த காலம்.உலகெங்கும் சென்று தேசங்களை பிடித்து, மற்ற இனங்களையும், கலாச்சாரங்களையும் வென்று அதன் வளங்களை பிரிட்டனின் நலனுக்கு பயன்படுத்தும் மனோபாவம் நிலவிய காலம்.</p>
<p>அந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட புகழ்மிக்க நாவல் ராபின்சன் க்ரூசோ (1719). இதை டேனியல் டிஃபோ எழுதியபோது பைபிளுக்கு அடுத்து உலகெங்கும் அதிகம் அச்சிடப்பட்ட புத்தகமாக இது விளங்கியது.ஆங்கிலத்தின் முதல் நாவல் என்று இதை சொல்வார்கள்.வெளிவந்த உடனே மாபெரும் ஹிட் ஆகிய இந்த புத்தகம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது.ஆங்கில இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமை இப்புத்தகத்துக்கு உண்டு.கிட்டத்தட்ட கல்ட் ஸ்டேடசை அடைந்த இப்புத்தகம் ஏராளமான திரைப்படங்களையும், நாவல்களையும் ( எ.கா: ஸ்விஸ் பேமிலி ராபின்சன்) உருவாக்கியது.</p>
<p>ராபின்சன் க்ரூசோ நாவலில், ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் பயணத்தில் இறங்கும் ராபின்சன் க்ரூசோ அந்த கப்பல் விபத்தில் சிக்கியதால் ஒரு தீவில் 28 ஆண்டுகள் வசிக்கிறான். தீவில் அவனுக்கு அதீத மதப்பற்று வந்துவிடுகிறது. ப்ரைடே என்ற மனித மாமிசம் தின்னும் &#8216;காட்டுமிராண்டியை&#8217; காப்பாற்றி அவனுக்கு ஆங்கிலமும்,&#8217; நாகரிகமும்&#8217; கற்றுத்தந்து அவனை கடவுளின் பாதைக்கு திருப்புகிறான். பிறகு 28 ஆண்டுகள் கழித்து ப்ரைடேவின் உதவியுடன் தப்பி ஊர் திரும்புகிறான்.</p>
<p>டீஃபோவின் க்ரூசோவுக்கு அடிமைகள் வைத்திருப்பது சரியேன்ற காலனிய மனப்போக்கு இருந்தது.க்ரூசோ நாவலை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் &#8216;அந்த தீவில் க்ரூசோவிடம ஏராளமாக பணமும்,தங்கமும் இருந்த்ன.ஆனால் க்ரூசோவுக்கு பணத்தை விட அடிமைகளே தேவைப்பட்டனர். பணத்தை சுரண்டுவதை விட மனித வளத்தை சுரண்டுவதிலேயே லாபம் அதிகம் என்பதை முதலாளித்துவம் உணர்ந்த தருணத்துக்கு உதாரணமாக&#8217; இதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.அதேபோல் க்ரூசோ ஒரு &#8216;காட்டுமிராண்டியை&#8217; பிடித்து அவனை &#8216;நாகரீகப்படுத்தி&#8217; தனக்கு அடிமையாக்கி கொள்கிறான்.அதனால் இது பிரிட்டானியரின் காலனிய மனப்போக்கையும், ஒரே தீவில் வசிக்கும் வெறும் இரு மனிதர்களுக்கிடையே கூட வர்க்க பேதம் நிலவுவதையும்&#8217; காட்டுவதாக எழுதுகிறார்.</p>
<p><a href="http://bp3.blogger.com/_9Ywhy9KsZyk/RtdCS3nve1I/AAAAAAAAAHk/wQMyn705SL0/s1600-h/200px-Robinson_Crusoe_and_Man_Friday_Offterdinger.jpg"><img border="0" src="http://bp3.blogger.com/_9Ywhy9KsZyk/RtdCS3nve1I/AAAAAAAAAHk/wQMyn705SL0/s400/200px-Robinson_Crusoe_and_Man_Friday_Offterdinger.jpg" style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" /></a>பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ராபின்சன் க்ரூசோ (1997) இந்த காலனிய மனபோக்கை தகர்த்து எறிகிறது.ப்ரைடேவை சந்திக்கும் முன் க்ரூசோ காலனியவாதியாகவும், இனவாதியாகவும், மதவாதியாகவும் இருக்கிறான்.ப்ரைடேவை சந்திக்குமுன் &#8220;ஏன் இந்த தீவில் என்னை மாட்டிவிட்டாய் கடவுளே&#8221; என கேட்கிறான்.அந்த தீவின் தனிமையை எதிர்கொள்ள அவனுக்கு இறைவனின் துணை தேவைப்படுகிறது.மதப்பற்று அவ்வளவு இல்லாத க்ரூசோ அதன்பின் மதப்பற்று கொள்கிறான். ப்ரைடேவை சந்தித்தபின் அவனை &#8220;இறைவனின் வழிக்கு&#8221; கொண்டுவரவே தன்னை இறைவன் இந்த தீவுக்கு கொண்டுவந்து சேர்த்ததாக கூட நம்புகிறான். ப்ரைடேவை &#8220;heathen&#8221; என கூட ஒருதரம் விளிக்கிறான் க்ரூசோ.</p>
<p>காட்டுமிராண்டியான ப்ரைடேவை அடிமைப்படுத்தும் பணி அடுத்து துவங்குகிறது.ப்ரைடேவை சங்கிலியால் கட்டிபோடுகிறான் க்ரூசோ.தன்னை அவன் &#8220;மாஸ்டர்&#8221; என அழைக்க வேண்டும் என்கிறான்.&#8221;மாஸ்டர்&#8221; என்றால் என்ன பொருள் என புரியாத ப்ரைடே அவனை மாஸ்டர் என அழைக்கிறான்.ப்ரைடேவுக்கு ஆங்கிலம் கற்றுதரும் பணி அடுத்து துவங்குகிறது.ஆங்கிலம் கற்று கொடுத்த பின் அடுத்து இறைவனை அறிமுகப்படுத்தும் பணி துவங்க வேண்டாமா?</p>
<p>&#8220;உன் கடவுள் யார்?&#8221; என ப்ரைடேவிடம் வினவுகிறான் க்ரூசோ.</p>
<p>&#8220;என் கடவுள் மகாயா எனும் முதலை&#8221; என ப்ரைடே பெருமிதத்துடன் கூறுகிறான்.&#8221;மகாயா வெறும் முதலை. உன் கடவுள் கர்த்தரே&#8221; என க்ரூசோ பதிலுரைக்க ப்ரைடே ஆவேசத்துடன் அதை மறுக்கிறான்.&#8221;மாகாயாவை என்னால் காட்ட முடியும்.உன் கடவுளை உன்னால் காட்ட முடியுமா?&#8221; என ப்ரைடே கேட்கிறான். க்ரூசோ அவனுக்கு பைபிளை தர, அதில் சில பக்கங்களை தெரியாமல் கிழித்து விடுகிறான் ப்ரைடே. ஆத்திரமடைந்த க்ரூசோ அவனுடன் சண்டை பிடிக்க ப்ரைடே கோபத்துடன் வெளியேறுகிறான்.</p>
<p>மார்க்சின் அதே வரிகளை க்ரூசோ உச்ச்ரிக்கிறான்.&#8221;ஒரே தீவில் வசிக்கும் இருவரிடயே கூட மதசண்டையா?&#8221; என்று.ப்ரைடேவிடம் சென்று மன்னிப்பு கேட்டு இருவரும் மீண்டும் நண்பர்களாகின்றனர். க்ரூசோவின் நாய் இறந்து விடுகிறது. அதற்காக பிரார்த்திக்காமல் அழுகிறான் க்ரூசோ.&#8221;நாய்க்காக உன் கடவுளிடம் பிரார்த்தனை செய்&#8221; என்கிறான் பிரைடே.&#8221;நாய்க்கு ஆத்மா இல்லை.மனிதனுக்குதான் ஆத்மா உண்டு&#8221; என்கிறான் க்ரூசோ</p>
<p>அதை மறுதலிக்கும் ப்ரைடே மகாயாவிடம் நாயின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறான். க்ரூசோவின் மனம் மாறுகிறது.</p>
<p>&#8220;இறைவனை அடைய ஒரே வழி தான் உண்டென நம்பியிருந்தேன்.இப்போது அந்த நம்பிக்கக என்னிடமிருந்து விடை பெற்று சென்றுவிட்டது&#8221; என எழுதுகிறான் க்ரூசோ.</p>
<p>கடைசியில் ப்ரைடேவின் &#8216;காட்டுமிராண்டி&#8217; இனத்தின் நடுவே மாட்டிகொள்கிறான் க்ரூசோ.அவனை கொல்ல அந்த இனத்தவர் முற்படுகின்றனர்.&#8221;வெள்ளையர் என் கிராமத்தை தாக்கி என் மனைவியை கற்பழித்து என் மகனை அடிமையாக கொண்டு சென்றுவிட்டனர்.அதனால் தான் கிராம மக்கள் உன்னை கொல்ல முற்படுகின்றனர்&#8221; என்கிறான் பிரைடே. க்ரூசோ கொல்லப்படவிருக்கும் தருணத்தில் பிரைடேவை சுட்டுகொன்று, க்ரூசோவை விடுவிக்கும் வெள்ளையர் அந்த காட்டுமிராண்டி கும்பலை விட மோசமாக நடந்து கொள்கின்றனர். அந்த கிராமம் முழுவதையும் தீக்கிரையாக்கி சங்கிலி கட்டி அந்த மக்களை அடிமைகளாக இழுத்து செல்கின்றனர்.பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.</p>
<p>அந்த காட்டுமிராண்டி இனத்தை விட தன் இனம் எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல, அவன் நாகரீகத்தை விட தன் நாகரிகம் எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல என அறிகிறான் க்ரூசோ. அவனது இனவாதமும், மதவாதமும்,காலனியவாதமும் அத்துடன் அழிந்துவிடுகிறது.புத்தம்புது மனிதனாக இங்கிலாந்துக்கு திரும்புகிறான் க்ரூசோ.தன் காதலியை திருமணம் செய்துகொண்டு புதுவாழ்வை துவக்குகிறான்.</p>
<p>நாவலை ஒப்பிடுகையில், ப்ரைடே திரைப்படத்தில் எழுச்சி அடைந்த கறுப்பினத்தின் குறியீடாக இருக்கிறான்.&#8221;நான் உனக்கு அடிமையாக இருக்க மாட்டேன்&#8221; என தெளிவாக க்ரூசோவிடம் சொல்கிறான். க்ரூசோவுக்கு சரிக்கு சரி சமமான ந்ண்பனாகத்தான் இருக்க விரும்புகிறான். கடைசிவரை முதலை கடவுள் மீது வைத்த அன்பை அவன் மாற்றி கொள்வதில்லை. க்ரூசோவை &#8220;மாஸ்டர்&#8221; என அழைக்க மறுக்கிறான். கடைசிவரை அவன் க்ரூசோவின் கலாச்சார உடைகளை (பேண்ட்,ஷர்ட்) அணிந்து கொள்வதில்லை. சாகும் கடைசி நிமிடத்திலும் ஆதிவாசி உடைகளையே அணிந்து முகத்தில் பெயிண்டு அடித்துகொள்கிறான்.</p>
<p>ராபின்சன் க்ரூசோ (1719) நாவலில் க்ரூசோவை சந்திக்கும் ப்ரைடே அவன் காலை எடுத்து தனது தலையில் வைத்து கொள்கிறான்.ராபின்சன் க்ரூசோ&#8217;ல் (1997) ப்ரைடே க்ரூசோவின் காலை எடுத்து தலையில் வைப்பது போல் நடித்து அவனை கீழே தள்ளுகிறான்.</p>
<p>ராபின்சன் க்ரூசோ (1719) எழுச்சி அடைந்த வெள்ளை இனத்தின் குறியீடு என்றால் ராபின்சன் க்ரூசோ (1997) மனம் திருந்திய வெள்ளை இனத்தின் குறியீடு. ராபின்சன் க்ரூசோ (1997) இரு மனிதர்களின் கதை அல்ல. புதிய பொன்னுலகை உருவாக்க விழையும் இரு இனங்களின் கதை.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/44/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/44/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/44/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/44/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/44/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=44&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/08/31/peace-of-civilizations/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>

		<media:content url="http://www.films.pierre-marteau.com/bilder/crusoe96_2.jpg" medium="image" />

		<media:content url="http://bp3.blogger.com/_9Ywhy9KsZyk/RtdCS3nve1I/AAAAAAAAAHk/wQMyn705SL0/s400/200px-Robinson_Crusoe_and_Man_Friday_Offterdinger.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை-6</title>
		<link>http://holyox.wordpress.com/2007/08/31/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-6/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/08/31/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-6/#comments</comments>
		<pubDate>Fri, 31 Aug 2007 00:20:20 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/08/31/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-6/</guid>
		<description><![CDATA[வடகொரிய தலைநகர் யோங்யாங், தேடாங் நதிக்கரையில் அமைந்த நகரம்.வடகொரியா சபிக்கப்பட்ட தேசம்,ஏழ்மையில் உழலும் தேசம் என இளங்கோவும்,சந்துருவும் கேள்விப்பட்டிருந்தனர்.ஆனால் யாங்க்யாங்கில் இறங்கியதும் அது தெரியவில்லை. முதலில் அவர்களை தாக்கியது கடும்குளிர்.பிப்ரவரியில் பூஜ்யம் டிகிரி செல்சியசுசுக்கு கீழே போகும் குளிர்.என்னதான் அதற்கேற்ற உடைகளை அணிந்திருந்தாலும் வாழ்வில் முதன்முறையாக அப்படி ஒரு குளிர் தாக்கும்போது நடுக்கம் வரத்தான் செய்யும். யாங்யாங் நகர தெருக்களில் வாகனம் போனபோது ஏதோ ஏழ்மை கண்ணுக்கு தெரியவே இல்லை.சாங்வாங் தெரு உலகின் எந்த நகரத்துடனும் போட்டியிடும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=43&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வடகொரிய தலைநகர் யோங்யாங், தேடாங் நதிக்கரையில் அமைந்த நகரம்.வடகொரியா சபிக்கப்பட்ட தேசம்,ஏழ்மையில் உழலும் தேசம் என இளங்கோவும்,சந்துருவும் கேள்விப்பட்டிருந்தனர்.ஆனால் யாங்க்யாங்கில் இறங்கியதும் அது தெரியவில்லை.</p>
<p>முதலில் அவர்களை தாக்கியது கடும்குளிர்.பிப்ரவரியில் பூஜ்யம் டிகிரி செல்சியசுசுக்கு கீழே போகும் குளிர்.என்னதான் அதற்கேற்ற உடைகளை அணிந்திருந்தாலும் வாழ்வில் முதன்முறையாக அப்படி ஒரு குளிர் தாக்கும்போது நடுக்கம் வரத்தான் செய்யும். யாங்யாங் நகர தெருக்களில் வாகனம் போனபோது ஏதோ ஏழ்மை கண்ணுக்கு தெரியவே இல்லை.சாங்வாங் தெரு உலகின் எந்த நகரத்துடனும் போட்டியிடும் வகையில் பெரிய கட்டிடங்களுடன் தான் இருந்தது.ஆனால் தெருக்களில் கார்கள் சுத்தமாக காணப்படவில்லை.சைக்கிள் தான் மக்களின் வாகனமாக காணப்பட்டது.</p>
<p>வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளங்கோவிடம் பிட்சு மெதுவாக &#8220;நீ இதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?&#8221; என கேட்டார் &#8220;டாக்டர்,பாலியல் நிபுணர்&#8221; என்றார் இளங்கோ. &#8220;பழனி வைத்தியர் போல&#8221; என முணுமுணுத்துக்கொண்டார் பிட்சு.</p>
<p>&#8220;நீ..&#8221; என சந்துருவை பார்த்து கேட்டார். &#8220;பைப் கம்பனி சேல்ஸ்மேன்.&#8221; என்றான் சந்துரு.&#8221;படிப்பு பி.காம்&#8221; என்றான்.பாதியில் படிப்பை விட்டதை சொல்லவில்லை.</p>
<p> &#8221;இந்த புத்தகங்களை வைத்துகொள்ளுங்கள்.உதவும்&#8221; என்றார் பிட்சு.30 நாட்களில் கொரிய மொழி எனும் புத்தகம். இவர்கள் போன வேன் யாங்யாங்கின் குயோக் எனும் இடத்தில் சென்று நின்றது.அனைவரும் இறங்கி அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார்கள்.</p>
<p>அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்களை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அன்றிரவு பிட்சு ரகசிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார்.அனைவரும் பிட்சுவின் அறையில் கூடினர்.</p>
<p> &#8221;சில விஷயங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்&#8221; என்றார் பிட்சு.&#8221;நீங்கள் இருவரும் சிவிலியன்கள்.போர்,சண்டை,உளவு,ரத்தம் என எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.அதனால் சில விஷயங்களை மறைத்தேன்.ஆனால் ஒரே இரவில் 16 கொலைகளை செய்ததை கண்டு அசந்து போய்தான் கூட்டிவந்தேன்&#8221; என்றார்.</p>
<p>&#8220;நீங்கள் எல்லாரும் யார்&#8221; என்று கேட்டான் சந்துரு.</p>
<p>&#8220;நாங்கள் இந்த மத ஸ்தாபனத்தில் நடப்பதை உளவறிய வந்தவர்கள்.எந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்பது இப்போதைக்கு ரகசியமாக இருக்கட்டும்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8221;உங்கள் பெயரையாவது சொல்லுங்கள்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;பெயரா முக்கியம்&#8221; என்றார் பிட்சு.&#8221;அரவிந்த்சாமி என வைத்துகொள்ளுங்களேன்&#8221; என்றார்.</p>
<p>&#8220;உங்கள் முகம் ஆந்தை மாதிரி இருக்கு.வேணும்னா ஆந்தை சாமி என கூப்பிடுகிறேன்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;எப்படியோ கூப்பிட்டுக்கொள்ளுங்கள்&#8221; என்றார் அரவிந்சாமி.</p>
<p>&#8220;நீங்கள் சி.பி.ஐ.யா?&#8221; என கேட்டான் சந்துரு. பதிலே சொல்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவினார் அரவிந்த்சாமி.</p>
<p> &#8221;இந்த ஸ்தாபனத்தில் நம் உளவாளிகள் கொரியாவுக்குள் கால் வைத்ததே இல்லை.முதல் முதலாக நாம் தான் வந்திருக்கிறோம்.பல இடங்களுக்கும் நாம் பிரித்து அனுப்பப்படுவோம்.இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் தொலைபேசி கூட கிடையாது.ஒரு தரம் பிரிந்தால் நாம் மறுபடி தொடர்பு கொள்ள எந்த வழிமுறையும் கிடையாது.நீங்கள் செய்ய வேண்டியது ஒழுங்காக அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டியது.என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே வாருங்கள்.என்ன கோல்மால் செய்தாவது இந்த அமைப்பின் மேல் மட்டத்துக்குள் நம்மில் ஒருவராவது போய்விடவேண்டும்.&#8221; என்றார்.</p>
<p>&#8220;கொரியாவில் முக்கியமாக சொல்ல வேண்டியது உன் வேலையை பார் என்பதே.இங்கு பல அடாவடிகள் நடக்கும்.கண்முன் கொலை செய்வார்கள்.கண்டுகொள்ள கூடாது.ஏழ்மை கண்னை குத்தும்.மனம் இரங்கி எதையும் செய்துவிடக்கூடாது.உணவு இங்கே கிடைப்பது மிக அரிது.ஆனால் மத நிறுவனத்தில் இருக்கும் நமக்கு சிக்கலில்லை.ஆனால் எக்காரணம் கொண்டும் பொதுமக்களோடு நெருங்கி பழகாதீர்கள்&#8221; என்றார் அரவிந்த்சாமி.</p>
<p>&#8220;என் மனைவியை பார்க்கவேண்டும்&#8221; என்றான் சந்துரு. &#8220;அவர் எங்கிருக்கிறார் என்பதை மேல்மட்டத்தில் நம்மில் யாரவது நுழைந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்&#8221; என்றார் அரவிந்த்சாமி.</p>
<p>&#8220;கல்யாணமானது என்றீர்களே.அது பொய்தானே&#8221; என்றான் சந்துரு.</p>
<p>கண்ணை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்வது சாத்தியமில்லை என்பார்கள்.ஆனால் அரவிந்த்சாமி அதில் கை தேர்ந்தவராக இருந்தார்.</p>
<p>&#8220;பொய் தான் சொன்னேன்.மன்னித்துவிடு&#8221; என்றார்.</p>
<p>சந்துருவின் முகம் மலர்ந்தது. அரவிந்த்சாமியின் முகம் வழக்கம் போலவே ஒரு விஷமச்சிரிப்புடன் இருந்தது.</p>
<p>அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்கள் அனைவரையும் சந்தித்தார்.நல்ல ஆங்கிலத்தில் பேசினார். &#8220;உங்கள் அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி&#8221; என்றார்.&#8221;நீங்கள் வந்த ஒரிசா ஆலயம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்த 20 பிட்சுகளும் இறந்துவிட்டனர்&#8221; என்றார்.</p>
<p>&#8220;அடடா,,அந்தகோ&#8221; என போலியாக அனுதாபப்பட்டார் அரவிந்சாமி. சந்துரு சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான்.</p>
<p>&#8220;உங்கள் அனைவரை பற்றிய விவரங்களும் அந்த ஆலயத்தில் ரெகார்டில் இருந்தன.அழிந்துவிட்டன.புதிதாக உங்கள் பயோடேட்டாவை மீட்டிங் முடிந்ததும் எழுதி கொடுங்கள்&#8221; என்றார் தலைமை பிட்சு. அடுத்த விஷயத்துக்கு போனார்.</p>
<p>&#8220;மனிதனுக்கு சேவை செய்வது இறைவனுக்கு சேவை செய்வது போன்றது என நம் வேதம் சொல்கிறது.இறைபூமியாம் கொரியாவில் கூடியுள்ள நீங்கள் முக்தி பெற வேண்டுமானால் முதலில் மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.உதாரணத்துக்கு பள்ளிகுழந்தைகளுக்கு பாடம் சொல்லிதருதல்,சேரிகளை சுத்தம் செய்தல்,சுகாதார கல்வியை பரப்புதல் ஆகியவை.யார் யார் இதற்கு தயாராக இருக்கிறீர்கள்?&#8221; என்று கேட்டார். அனைவரும் கை உயர்த்தினர்.</p>
<p> &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>&#8220;அம்மா..&#8221; என அலறினான் அந்த கொரிய பெண்.வலிதாங்க முடியவில்லை.குடித்திருந்த மதுவையும் மீறி வலி விண்,விண் என உடல் எங்கும் ஊடுறுவியது. &#8220;பொறுத்துக்கொள்&#8221; என வேதனையுடன் சொன்னார் இளங்கோ.தன் வாழ்வில் அவர் செய்யும் முதல் சிசேரியன் ஆபரேஷன் அது.அந்த ஆஸ்பத்திரியில் எந்த மருந்தும் இல்லை.உயிர் போகும் நிலையிலிருந்த அந்த கர்பிணிப்பெண்ணுக்கு மயக்க மருந்து இல்லாததால் ஏராளமான மதுவை ஊற்றிக்கொடுத்து ஆபரேஷன் செய்தார். அவள் மீண்டும்,மீண்டும் அலறினாள். சந்துரு மதுபாட்டிலை எடுத்து அவள் வாயில் ஊற்றினான்.ஆனால் அவளால் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை.</p>
<p>குழந்தை பிறந்து அதன் அழுகை கூட காதில் விழவில்லை. அதிர்ஷட்வசமாக வலியிலேயே மயக்கம் போட்டு விட்டாள்.</p>
<p>ஆபரேஷன் முடிந்து கண்ணீரோடு வெளியே வந்தான் சந்துரு.இந்த 3 மாதத்தில் இதுபோல் பல சம்பவங்களை பார்த்துவிட்டான்.மருந்து இல்லாமல்,எந்த உபகரணமும் இல்லாமல் அந்த மருத்துவமனையை அவனும் இளங்கோவும் அரவிந்சாமியும் நடத்திக் கொண்டிருந்தார்கள். தினமும் கணக்கு வழக்கில்லாமல் நோயாளிகள் எலும்புக்கூடாய் வந்து நின்றார்கள். அவர்கள் பயோடேட்டாவில் மருத்துவமனை அட்டெண்டென்ட் என எழுதி கொடுக்கும்படி இளங்கோ ஆலோசனை சொல்லியிருந்தார்.அப்போதுதான் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்பது அவர் திட்டம்.அதே போல் தான் நடந்தது.</p>
<p>&#8220;எனக்கு ஒன்றும் புரியவில்லை&#8221; என சொன்னார் இளங்கோ.&#8221;இதற்கு மேல் மனநிறைவு தரும் மருத்துவ பணியை நான் என் வாழ்வில் எங்கும் செய்ததில்லை.மனிதனாய் பிறந்த முழு பயனையும் இந்த 3 மாதத்தில் அனுபவித்து விட்டேன்.இந்த ஊரில் தான் எத்தனை வறுமை,என்ன கொடுமை&#8221; என சொன்னார்.</p>
<p>&#8220;உணமைதான்.எனக்கும் இந்த மதத்தை பற்றி இப்போது மோசமாக நினைக்க தோன்றவில்லை.என் மனைவி மட்டும் திரும்ப கிடைத்தால் சாகும் வரை இதே மருத்துவமனையில் தங்கியிருந்து மக்கள் பணி செய்வேன்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;அட பாவிகளா.என் நிலைமை என்ன?&#8221; என கோபத்துடன் சொன்னார் அரவிந்சாமி.&#8221;நான் தான் ஏதோ தப்பு கணக்கு போட்டு ஏமாந்துவிட்டேன் போலிருக்கிறது.என் மற்ற நண்பர்களிடமிருந்து வரும் தகவலின்படி அனைவரும் இதே போல் மக்கள் பணி தான் செய்கிறார்களாம்.நான் ஏதோ என்னை தலைமை பிட்சுவாக்குவார்கள் என கணக்கு போட்டால் இப்படி ஆயம்மா வேலை பார்க்க வைத்துவிட்டார்களே&#8221; என்றார்.</p>
<p>&#8220;இன்னும் எத்தனை மாதம் இப்படி வேலை செய்வது?நாம் வந்த வேலை என்ன ஆவது?&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;என்ன செய்ய சொல்கிறாய்&#8221; என கேட்டார் அரவிந்சாமி. &#8220;என் மனைவியை தேட வேண்டும்.எப்படியாவது இந்த மதத்தின் பெரும்புள்ளி ஒருவரை கடத்தி வந்து நாலு மிதி வைத்தால் என் மனைவி இருக்குமிடத்தை சொல்லிவிடுவார்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;முழு கதையும் கெட்டுவிடும்.இது இந்தியா என நினைத்தாயா?இங்கு கார்,வேன் எதுவும் கிடையாது.சைக்கிளில் தான் கடத்த முடியும்.மேலும் தினமும் சாயந்திரம் நாம் இங்குள்ள மடத்துக்கு போக வேண்டும் என்பதை கவனித்தாயா?ஒரு நாள் போகவில்லை என்றாலும் செய்தி மேலிடத்துக்கு போய்விடலாம்.&#8221; என்றார் அரவிந்சாமி.</p>
<p>&#8220;நம் இருவருக்கும் காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லை என்றால் மடத்துக்கு போக வேண்டியதில்லை அல்லவா&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;நீ அப்படி வருகிறாயா?சரி.ஆனால் கடத்த வாகனம் வேண்டுமே&#8221; என்றார் பிட்சு. &#8220;நீங்கள் தான் சொல்லி விட்டீர்களே.சைக்கிளில் கடத்தலாம் என்று.அதே போல் செய்வோம்&#8221; என்றான் சந்துரு.</p>
<p> &#8211;</p>
<p>அன்று இரவில் யாங்யாங் நோக்கி இரு சைக்கிள்கள் விரைந்தன.100 மைல் தூரம் தான்.பதுங்கி பதுங்கி இரவில் தான் போக முடியும்.அடுத்த அத்யாயம் துவங்குவதற்குள் போய் சேர்ந்து விடுவார்கள் என நம்பலாம் (அவர்கள் யாங்யாங் போய் சேர்ந்தபின்&#8230;&#8230;.தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/43/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/43/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/43/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=43&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/08/31/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-6/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை-5</title>
		<link>http://holyox.wordpress.com/2007/08/26/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-5/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/08/26/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-5/#comments</comments>
		<pubDate>Sun, 26 Aug 2007 20:44:34 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/08/26/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-5/</guid>
		<description><![CDATA[&#8220;யார் இவர்கள்?&#8221; என கேட்டார் ஒரு பிட்சு. &#8220;தெரியவில்லை.இங்கே நடந்த கொலைகளை உடனே ஆலயத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவர்களை என்ன செய்வது என்று கேட்கவேண்டும்&#8221; என்றார் இன்னொரு பிட்சு. &#8220;அவசியமே இல்லை&#8221; என்று இன்னொரு குரல் கேட்டது. நான்கு பிட்சுகளும் திரும்பி பார்த்தனர். வாயிலருகே நம் பழைய நண்பரான மும்பை பிட்சு நின்றிருந்தார்.அவரை நால்வருக்கும் அடையாளம் தெரிந்தது. &#8220;நீங்களா?உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?&#8221; என கேட்டார் ஒரு பிட்சு.  &#8221;இனி தான் ஏதாவது ஆகணும்&#8221; என்றார் மும்பை பிட்சு. கலாஷ்னிகோவை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=42&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;யார் இவர்கள்?&#8221; என கேட்டார் ஒரு பிட்சு.</p>
<p>&#8220;தெரியவில்லை.இங்கே நடந்த கொலைகளை உடனே ஆலயத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவர்களை என்ன செய்வது என்று கேட்கவேண்டும்&#8221; என்றார் இன்னொரு பிட்சு.</p>
<p>&#8220;அவசியமே இல்லை&#8221; என்று இன்னொரு குரல் கேட்டது. நான்கு பிட்சுகளும் திரும்பி பார்த்தனர்.</p>
<p>வாயிலருகே நம் பழைய நண்பரான மும்பை பிட்சு நின்றிருந்தார்.அவரை நால்வருக்கும் அடையாளம் தெரிந்தது. &#8220;நீங்களா?உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?&#8221; என கேட்டார் ஒரு பிட்சு.</p>
<p> &#8221;இனி தான் ஏதாவது ஆகணும்&#8221; என்றார் மும்பை பிட்சு. கலாஷ்னிகோவை எடுத்தார். சுட்டார். நால்வரும் அடுத்த வினாடி கீழே விழுந்து உயிர் இழந்தனர்.</p>
<p> பிட்சு அதன்பின் விரைந்து செயல்பட்டார்.தண்னீர் ஜக்கை எடுத்து இளங்கோ,சந்துரு மீது தெளித்து எழுப்பினார்.</p>
<p> &#8221;எதற்கு எங்களை காப்பாற்றினாய்?&#8221; என கேட்டான் மயக்கம் தெளிந்து எழுந்த சந்துரு.</p>
<p>&#8220;அதுவா முக்கியம்?போய் சேட்டு மகளை கூட்டி வாருங்கள்.அவரை தவிர மற்றவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>அறை அறையாக தேடினர் இளங்கோவும் சந்துருவும்.ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கொரியா போகவேண்டிய கும்பலை கண்டுபிடித்தனர். சேட்டு மகளை மட்டும் நைசாக பேசி வெளியே கூட்டி வந்தனர். அப்பாவும்,அண்ணனும் செத்த செய்தியை தெரிவித்தனர்.மீராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.</p>
<p>&#8220;அம்மாவும்,அப்பாவும் குருதேவர்தான்.அவும் ஷென்ரிக்கியோ.&#8221; என்றாள் மீரா.</p>
<p>&#8220;பேச நேரமுமில்லை.பொறுமையும் இல்லை.வேலை ஏராளமாக இருக்கிறது&#8221; என்றான் சந்துரு.இருவரும் சேர்ந்து மீராவை கட்டி இன்னொரு அறையில் அடைத்தனர்.</p>
<p>&#8212;&#8212;-</p>
<p> &#8221;அப்படி என்னப்பா தலை போகும் வேலை?&#8221; என்று கேட்டார் பிட்சு.</p>
<p>&#8220;நீ முதலில் எங்களை எதற்கு காப்பாற்றினாய் என்பதை சொல்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;நீங்கள் இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை சொன்னால் நான் அதை பொறுத்து சொல்லலாமா வேண்டாமா என யோசிப்பேன்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;சேட்டு மகளை காப்பாற்றிவிட்டோம்.எங்கள் மனைவி,மகள் என்ன ஆனர்கள் என தெரியவில்லை.அவர்களை பார்க்கும் நம்பிக்கையும் இல்லை.இனி போலிஸில் சரணடைவதுதான் திட்டம்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;அட முட்டாள்களா&#8221; என்றார் பிட்சு.&#8221;உன் மனைவி இருக்குமிடம் போக அருமையான் சந்தர்ப்பம் வந்திருக்கு.நாளை காலை விமானம் வரும்.அதில் ஏறினால் வடகொரியா போய்விடலாம்.அங்கு தான் உன் மனைவியும் அவர் மகளும் இருக்கிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>&#8220;எனக்கு புரியலை&#8221; என்றான் சந்துரு.&#8221;எப்படி என்னை விமானத்தில் ஏற்றூவார்கள்?&#8221;</p>
<p>&#8220;எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்க முடியாது.நீங்கள் இருவரும் இங்கே உட்காருங்கள்.மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8212;</p>
<p>அதன்பின் புயல் வேகத்தில் காரியங்கள் நடந்தன.திடு திடுவென நிறைய புது பிட்சுகள் வந்தனர்.அனைத்து பிணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு அறையில் குவிக்கப்பட்டன.கொரியா போக தயாராக இருந்தவர்கள் கட்டி வைக்கப்பட்டு ஒரு வேனில் ஏற்றி செல்லப்பட்டனர்.அவர்களுக்கு பதில் புதிதாக சில நபர்கள் அந்த அறைக்குள் சென்றனர்.</p>
<p>சந்ருவுக்கும்,இளங்கோவுக்கும் தலை மொட்டை அடிக்கப்பட்டது.பிட்சு உடை அணிவித்து அந்த அறையில் உட்கார வைக்கப்பட்டனர்.நம் பிட்சுவும் அந்த அறையில் வந்து அமர்ந்து கொண்டார்.</p>
<p>காலையில் கொரிய விமானம் வந்தது.பைலட்கள் கோயிலில் ரெஸ்ட் எடுத்தனர் .புதிதாக 20 பிட்சுகள் கோயிலில் பொறுப்பேற்றிருந்தனர். பைலட்களால் ஒரு வித்யாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.மாலையில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு டார்ஜிலிங் நோக்கி விமானம் கிளம்பியது.</p>
<p> &#8212;</p>
<p>அன்றிரவு காட்டிலிருந்து ஒரு பெரும் கும்பல் ஆய்தங்களுடன் வந்து கோயிலை சூழ்ந்தது.கோயிலுக்கு தீ வைத்தது.சாவகாசமாக அதன்பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது.கோயில் உள்ளே இருந்த 20 பிணங்கள் சாம்பலாயின.</p>
<p>&#8211;</p>
<p> &#8221;நீங்கள் எல்லாரும் யார்?&#8221; என ஆயிரமாவது முறை கேட்டான் சந்துரு.</p>
<p>&#8220;மர்மப்புன்னகை பூத்தார் பிட்சு.</p>
<p>முகத்தில் குத்தலாம் போல் வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சந்துரு.</p>
<p>டார்ஜிலிங் சென்ற விமானம் அங்கே அவர்களை தரை இறக்கியது. அங்கிருந்து பஸ்ஸில் ஏறி நேபாள எல்லை தாண்டினர்.அங்கே மீண்டும் ஒரு விமானம் அவர்களை ஏற்றிக்கொண்டது.</p>
<p>விமானத்தில் நன்றாக தூங்கினான் சந்துரு.எழுந்தபோது பிட்சு அவனை பார்த்து சிரித்தார்.&#8221;வடகொரியாவுக்கு வருக&#8221; என்றார்.&#8221;இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்கு போய் விடுவோம்.அதிர்ஷ்டம் இருந்தால் உன் மனைவியை பார்க்கலாம்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;யார் நீ?&#8221; என மீண்டும் கேட்டான் சந்துரு. &#8220;</p>
<p>&#8220;அதை கண்டுபிடிக்கத்தானே பிட்சு ஆயிருக்கிறேன்.அவும் ஷென்ரிக்கியோ&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;உன்னை கட்டிப்போட்டிருந்தபோதே கொன்றிருக்க வேண்டும்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;இன்னும் சற்றுநேரத்தில் விமானம் கீழே இறங்கிவிடும்.அதன்பின் சாவகாசமாக கொலை செய்து கொள்&#8221; என்றார் பிட்சு</p>
<p>(தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/42/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/42/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/42/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/42/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/42/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=42&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/08/26/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை &#8211; 4</title>
		<link>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-4/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-4/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jul 2007 06:07:07 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-4/</guid>
		<description><![CDATA[ஒரு நிமிடம் தான் சந்துரு திகைத்தான்.அடுத்த நிமிடம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.இளங்கோ இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார்.சந்துரு அவரை தேற்ற வேண்டியதாக போனது. &#8220;இவன் புளுகுகிறான்&#8221; என்றான் சந்துரு.&#8221;சூரியன் மேற்கே உதிக்கும் என்றால் கூட நம்புவேன்.என் மனைவியை பற்றி யார் சொன்னாலும் நம்பமாட்டேன்&#8221; என்றான் சந்துரு. &#8220;கோவலனை பற்றி கண்ணகி இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்திருப்பாள்&#8221; என்றார் பிட்சு.&#8221;சொல்லி திருந்தாத ஜென்மம் நீ.எனக்கென்ன எக்கேடோ கெட்டு ஒழி&#8221; என்றார் பிட்சு. &#8220;இவன் சொல்லுவது பொய்யாக இருக்கும் என எப்படி சொல்லுகிறீர்கள்?உங்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=41&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு நிமிடம் தான் சந்துரு திகைத்தான்.அடுத்த நிமிடம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.இளங்கோ இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார்.சந்துரு அவரை தேற்ற வேண்டியதாக போனது.</p>
<p>&#8220;இவன் புளுகுகிறான்&#8221; என்றான் சந்துரு.&#8221;சூரியன் மேற்கே உதிக்கும் என்றால் கூட நம்புவேன்.என் மனைவியை பற்றி யார் சொன்னாலும் நம்பமாட்டேன்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;கோவலனை பற்றி கண்ணகி இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்திருப்பாள்&#8221; என்றார் பிட்சு.&#8221;சொல்லி திருந்தாத ஜென்மம் நீ.எனக்கென்ன எக்கேடோ கெட்டு ஒழி&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;இவன் சொல்லுவது பொய்யாக இருக்கும் என எப்படி சொல்லுகிறீர்கள்?உங்கள் மனைவி உங்கள் மீது அத்தனை அன்பு வைத்திருந்தால் ஏன் இத்தனை நாளாக உங்களை தொடர்பு கொள்ளவில்லை?ஏன் அந்த சங்கத்தில் சேர்ந்தார்?ஏன் கொரியா போனார்?&#8221; என கேட்டார் இளங்கோ.</p>
<p>&#8220;அவளாக போயிருக்க மாட்டாள்.இந்த சண்டாளர்கள் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;அட பாவமே&#8221; என சிரித்தார் பிட்சு.&#8221;உன் மனைவி என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா,கார் வைத்து கடத்திக்கொண்டு போக?அசோகவனத்து சீதை மாதிரி நீ வருவாய் என கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறாள் என நினைக்கிறாயாக்கும்?நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8221;உன்னை இதுவரை நான் அடிக்கவில்லை என்பதால் எப்போதும் அடிக்கமாட்டேன் என நினைத்துக் கொள்ளாதே&#8221; என எச்சரித்தான் சந்துரு.</p>
<p>&#8220;நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்.&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?&#8221; என்றான் சந்துரு.</p>
<p> &#8212;&#8211;</p>
<p>மும்பை நகர எல்லையை தாண்டி அகமதாபாத் சாலையில் கார் விரைந்தது.மனோரி அருகே ஒதுக்குபுறமாக வண்டியை நிறுத்தினார்கள்.சாப்பிட்டுக்கொண்டே என்ன செய்வது என ஆலோசித்தார்கள்.</p>
<p>&#8220;என் மனைவியும்,உங்கள் மகளும் கொரியாவில் இருக்கின்றனரா,இல்லை இந்த மொட்டையன் வழக்கம் போல் பொய் சொல்லியிருக்கிறானா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;அடேய் பிட்சு அவர்கள் இருவரும் கொரியாவில் தான் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன? என்றான்.</p>
<p>&#8220;என் வார்த்தை தான் ஆதாரம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8221;சரி&#8230;சங்க உறுப்பினர்களை எப்படி கொரியாவுக்கு அனுப்புவீர்கள்?&#8221; என கேட்டார் இளங்கோ.</p>
<p>&#8220;ஒரிசாவில் உள்ள எங்கள் கிளைக்கு அனுப்புவோம்.அங்கிருந்து மாதம் ஒரு முறை ஸ்பெஷலாக தனி விமானம் வந்து அவர்களை கொரியாவுக்கு கூட்டிப்போகும்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;நீங்கள் கேட்காமலேயே ஒரு தகவலையும் சொல்கிறேன்.சேட்டு மகள் மீரா தற்போது ஒரிசாவில் தான் இருக்கிறாள்.அடுத்த வாரம் கொரியா அனுப்புகிறோம்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;இத்தனை தகவல்கள் சொன்ன நீ அவரை மீட்பது எப்படி என்றும் சொல்லலாமே?உனக்கு புண்ணியமா போகும்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;இயந்திர துப்பாக்கிகளுடன் 20 பிட்சுக்கள் அங்கு இருக்கிறார்கள்.என்னை விட கராத்தே தெரிந்தவர்கள்.உள்ளூர் போலிஸுக்கு கணிசமான மாமூல் போயிவிடும்.ஒரிசா மந்திரி ஒருவரே எங்கள் சங்க உறுப்பினர்.இதற்கு மேல் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;சரி கிளம்புவோம்&#8221; என்றான் சந்துரு. &#8220;</p>
<p>எங்கே?&#8221; என புரியாமல் கேட்டார் பிட்சு.</p>
<p>&#8212;&#8211;</p>
<p>மாருதி காரிலேயே சுந்தர்கர் போய் சேர்ந்தார்கள்.சுந்தர்கர் ஒரிசா,ஜார்கண்ட் எல்லையில் உள்ள பகுதி.பெரிய நகரமும் கிடையாது.சுந்தர்கரிலிருந்து கோயில் இருக்கும் தல்சாராவுக்கு செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது.கோயில் ஒதுக்குப்புறமாக காட்டில் இருந்தது.உள்ளூர் மக்கள் யாரும் அங்கு வருவதில்லை.அப்படி ஒரு கோயில் இருக்கு என்பதே அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருந்தது. போலிசுக்கு பயந்து பதுங்கி பதுங்கி வந்ததில் பிரயாணத்துக்கே ஐந்து நாள் ஆகிவிட்டது.</p>
<p>நாளை மறுநாள் விமானம் வரும் என பிட்சு சொன்னார்.ஏதேனும் செய்வதென்றால் இன்னும் 30 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். என்ன செய்வது என யோசித்து,யோசித்தே இரவும் பாதிநாளும் போய்விட்டது.பிட்சு வேறு அடிக்கடி எரிச்சலை கிளப்பும் வகையில் பேசிவந்தார்.</p>
<p>சாயந்திரம் 3 மணிக்கு தான் சந்துருவுக்கு அந்த ஐடியா வந்தது. &#8220;தற்கொலை படை போல் உள்ளே போய் சண்டை பிடிக்க வேண்டும்.குறைந்தது 10 பேரையாவது வெட்டி போட்டு சாகவேண்டும்&#8221;</p>
<p>&#8220;உனக்கு மறை கழண்டிருக்கிறது&#8221; என சொன்னார் பிட்சு.&#8221;யார் பக்கத்திலும் நீ போகவே முடியாது.இயந்திர துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்.நீ என்ன ஆயுதம் வைத்திருக்கிறாய்?&#8221; என கேட்டார் பிட்சு. பேனாகத்தி தான் அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம்.</p>
<p> தல்சாரா போய் ஏதாவது ஆயுதம் கிடைத்தால் வாங்கிவருகிறேன் என கிளம்பிபோனார் இளங்கோ.5 மணி சுமாருக்கு நாலைந்து கோடாரிகளுடனும்,நீள கத்திகளுடனும்,அரிவாள்களுடனும் வந்தார்.</p>
<p>&#8220;இதை வைத்து சவரம் செய்யத்தான் முடியும்&#8221; என்றார் பிட்சு.&#8221;அடேய் மாக்கான்களா.ஏண்டா இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்?கோயில் காம்பவுண்டையே உங்களால் தாண்ட முடியாது.நீங்கள் செத்து ஒழியுங்கள் என விட்டுவிடுவேன்.என் கதி என்ன?என்னை அவிழ்த்து விடுங்கள்.நான் மும்பை நடந்தே போய்விடுகிறேன்.நீங்கள் அதன் பின் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்&#8221; என்றார்.</p>
<p>அவர் பேச்சை இருவரும் கேட்கவில்லை.நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தனர்.வயிறு நிறைய சாப்பிட்டனர். நள்ளிரவானதும் காரை ஓட்டி சென்று சாலை அருகே நிறுத்தினர்.</p>
<p>பகலிலேயே அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருக்காது.இரவில் கேட்கவே வேண்டாம்.</p>
<p> &#8221;போய் வருகிறோம் பிட்சு&#8221; என்றான் இளங்கோ.&#8221;காலையில் இந்த வழியில் யாராவது வருவார்கள்.உன் கட்டை அவிழ்த்து விட சொல்லி காரை ஓட்டிக்கொண்டு போய்விடு.காரில் 8 லட்சம் பணம் இருக்கிறது.அதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்.இப்படி கொரியாகாரனுக்கு மாமா வேலை செய்து பிழைக்காதே&#8221; என்றான்.</p>
<p>&#8220;நீங்கள் சத்தியமாக திரும்பி வரமாட்டீர்கள்.என்னை அடித்தீர்கள்,கட்டி வைத்தீர்கள் என்றெல்லாம் கோபித்து கொள்ளவில்லை.நிஜ அன்பில் சொல்லுகிறேன்.இது வேண்டாம்.உன் மனைவியும் இவர் மகளும் யானை வாயில் போன கரும்புகள்.இனி திரும்பி வர மாட்டார்கள்.இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.எங்கேயாவது போய் பிழைத்து கொள்ளுங்கள்.நான் சத்தியமாக போலிஸில் உங்களை காட்டி கொடுக்கவில்லை&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;என் மனைவியை பற்றி இப்போது கவலை இல்லை. அப்பனையும்,அண்ணனையும் இழந்த ஒரு அனாதை பெண்னை காக்க வேண்டும்&#8221; என்றான் சந்துரு. &#8220;வருகிறோம்&#8221; என்றான்.கிளம்பினான்.</p>
<p>&#8220;அனாதைகளுக்கு எல்லாம் நீ தான் ரட்சகனா?உனக்கு சண்டையே பிடிக்க தெரியாது.சொன்னா கேளு&#8221; என்றார் பிட்சு. அவர்கள் கேட்கவில்லை.கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். காட்டிலிருந்து ஆந்தை ஒன்று கூவியது.</p>
<p>&#8220;ஆந்தை கூவினா சாவுன்னு அர்த்தம்&#8221; என முணுமுணுத்தார் பிட்சு.&#8221;லேடி மாக்பெத், டங்கனை கொல்ல போனப்ப ஆந்தை கூவி வேண்டாம்னு சொல்லிச்சு.அவ கேக்கலை.இப்பவும் போகவேண்டாம்னு ஆந்தை சொல்லுது.நானும் சொல்றேன்.கேக்கறானுங்களா?&#8221; என திட்டினார். அதன்பின் கார் பின்சீட்டில் நிம்மதியாய் படுத்து தூங்க துவங்கினார். ஆந்தை மீண்டும் மீண்டும் கூவியது.</p>
<p>&#8211;</p>
<p>இளங்கோவும் சந்துருவும் காட்டில் புகுந்து கோயிலை நோக்கி நடந்தனர்.நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.டார்ச் வெளிச்சத்தை தரையில் அடித்து யாரும் கண்டுபிடிக்காதபடி நடந்தனர். கொஞ்ச தூரம் நடந்ததும் இளங்கோ நின்றார்.காட்டில் மல்பெர்ரி மரங்கள் நிறைய இருந்தன.</p>
<p>&#8220;காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு&#8221; என சொன்னார்.</p>
<p>&#8220;எதற்கு?&#8221; என புரியாமல் கேட்டான் சந்துரு.</p>
<p> &#8221;மல்பெர்ரி மரம் ஒரிசாவில் நிறைய வளர்ப்பார்கள்.அதில் மல்பெர்ரி பூச்சிகள் வலரும்.அதிலிருந்து ட்சார் எனும் பட்டு நூலை எடுப்பார்கள்&#8221; என சொன்னார் இளங்கோ.&#8221;முதல் முதலாக ஒரு பவுத்த பிட்சு தான் மல்பெர்ரி மரத்தை சீனாவிலிருந்து பிகாருக்கும்,அங்கிருந்து ஒரிசாவுக்கும் கொண்டுவந்தார்&#8221; என்றார்.</p>
<p>&#8220;தகவலுக்கு நன்றி.ஆனால் இப்போது இந்த நடுக்காட்டில் இதை தெரிந்து என்ன பயன்?&#8221; என கேட்டான் சந்துரு.</p>
<p>&#8220;பாதி காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு.மற்றதை அதன்பின் சொல்கிறேன்.சீக்கிரம்&#8221; என்றார் இளங்கோ.தேட ஆரம்பித்தார்.</p>
<p>முணுமுணுத்துக்கொண்டே சந்துருவும் தேடினான்.விரைவில் கண்டுபிடித்து விட்டான்.</p>
<p>காய்ந்த மல்பெர்ரி மரத்திலிருந்து கிளைகளை உடைத்தார் இளங்கோ.சின்ன சின்ன குச்சிகளாக சேர்த்தார்.கொஞ்சம் பெரிய குச்சிகளாக எடுத்து வளைத்தார்.</p>
<p>&#8220;என்ன செய்கிறீர்கள்?&#8221; என புரியாமல் கேட்டான் சந்துரு.</p>
<p>&#8220;அரிவாள் வாங்கப்போன இடத்தில் தான் இதை தெரிந்துகொண்டேன்&#8221; என்றார் இளங்கோ.&#8221;மல்பெர்ரி மரம் பட்டுபூச்சி வளர்ப்பிற்கும், soil erosion control க்கும் மட்டும் உதவுவதில்லை.சீனர்கள் அதில் அருமையாக வில் அம்பு செய்வார்கள்.மூங்கில் கிடைக்காத போது மல்பெர்ரி தான் பயன்படும்.பச்சை மரம் உதவாது.பாதி காய்ந்த மரம் தான் உதவும்.இப்ப புரியுதா?&#8221; என்றார்.</p>
<p>மரக்கிளைகளை செதுக்கிக்கொண்டே சொன்னார்.&#8221;3 முதல் 4 அடி வில்கள் மிகவும் ஆபத்தானவை.கிட்டத்தட்ட 900 அடி தூரம் வரை சக்தியோடு அம்பு பாயும்.சீனர்கள் இதில் மிக திறமையானவர்கள்.முழுக்க முழுக்க மூங்கிலையும் மரத்தையும் வைத்து மட்டுமே அம்பு செய்தார்கள்.ஆனால் ஒரிசாவில் அம்பு முனையில் கூரிய இரும்பை பொறுத்துவார்கள்.அடிபட்ட மிருகம் அம்பை உதறி விட்டு ஓடினால் கூட முனை உடலிலேயே தங்கி உயிரை குடித்து விடும்.அம்பு நாணுக்கு குதிரை முடியிலிருந்து சீன புல் நார் வரை பயன்படுத்துவார்கள்.ஆனால் அதில் சக்தி வாய்ந்தது இதோ இம்மாதிரியான சீன புல்நார் தான்&#8221; என்றார். இரண்டு விற்களும் அம்புகளும் தயாராயின.சிறிய அம்பு முனைகளை எடுத்தார்.மரக்குச்சிகளின் முனையில் வைத்து பொருத்தியதும் அம்புகள் தயாராகிவிட்டன.</p>
<p>&#8220;நீங்க என்ன தொழில் இதுக்கு முந்தி பாத்தீங்க?கசாப்பு கடை வெச்சிருந்தீங்களா?&#8221; என்றான் சந்துரு. &#8220;கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்.நான் டாக்டர்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8211;</p>
<p>கோயில் அருகே சென்றார்கள்.கோயில் காம்பவுண்ட் 12 அடி உயரம் இருந்தது.ஏற முடியாது என்பது தெரிந்தது.காம்பவுண்டுக்கு வெளியே காவலாளி ஆபீஸ் ஒன்று இருந்தது.எத்தனை பேர் அதில் இருந்தனர் என தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோது ஆபிஸிலிருந்து இயந்திர துப்பாக்கி ஏந்திய பிட்சு ஒருவர் இயற்கை அழைப்புக்கு வெளியே வந்தார். நைசாக அவரை பின் தொடர்ந்தனர்.துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு பிட்சு முதுகை காட்டியபடி உட்கார்ந்தார்.</p>
<p>&#8220;அம்பு விட தெரியுமா?&#8221; என கேட்டார் இளங்கோ.</p>
<p>அம்பை நாணில் ஏற்றினார்.&#8221;அரிவாளை அந்த பையன் சாணை தீட்டும்போது அம்பு விட்டு பழகிக்கொண்டிருந்தேன்&#8221; என்றார். விஷ் என்ற சத்தம் கேட்டது.200 அடி தூரத்திலிருந்து விடப்பட்ட இளங்கோவின் அம்பு ஆவேசமாக பிட்சுவின் கழுத்தை துளைத்தது.</p>
<p>சந்துருவின் அம்பு பிட்சுவை விட்டு 10 அடி தள்ளி விழுந்தது. பிட்சுவின் கலாஷ்னிகோவை எடுத்து இயக்கி பார்த்தனர்.எப்படி சுடுவது என தெரியவில்லை.அதை அங்கேயே கடாசிவிட்டு மீண்டும் கேட்டருகே போய் காத்திருந்தனர். 15 நிமிடம் கழித்து போன பிட்சு திரும்பி வராததால் அவரை தேட இருவர் துப்பாக்கிகளுடன் வெளீயே வந்தனர்.காட்டினுள் நுழைந்தனர். இரண்டாவது நிமிடத்தில் சரியாக இரண்டு அம்புகள் ஏவப்பட்டன.வழக்கம்போல் ஒன்று மிகச்சரியாக ஆளை அடித்து வீழ்த்தியது.இன்னொன்று தன் குறியை தவற விட்டது.ஆனால் அந்த பிட்சு அதிர்ச்சியில் திரும்புமுன் பெரிய கல் ஒன்று அவர் மீது வீசப்பட்டது.அடி வயிற்றில் அடி வாங்கி அவர் கீழே விழுந்தார்.</p>
<p>&#8220;வாழ்க்கையில் முதல் கொலை&#8221; என்றான் அதிர்ச்சியுடன் சந்துரு.</p>
<p>&#8220;உனக்குதான் அப்படி.நான் படிக்கும்போதே ஒரு நோயாளியை மருந்து மாற்றிக்கொடுத்து பரலோகம் அனுப்பி வைத்தேன்&#8221; என்றார் இளங்கோ. மயங்கிகிடந்த பிட்சுவின் அருகே சென்றார்.&#8221;சின்ன பையன்.பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் இவனை விட்டால் நமக்குத்தான் ஆபத்து&#8221; என்றார். கத்தியை ஒரு தரம் எடுத்து விட்டால் கொலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் முதலாக அறியும் யாரும் அதிரவே செய்வார்கள்.</p>
<p> &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p>காவல் ஆபிசுக்குள் வேறு யாரும் இல்லை.சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள்.நல்ல வேளையாக நாய் எதுவும் இல்லை.பதுங்கி பதுங்கி போனபோது வாசல் கதவு அருகே துப்பாக்கியுடன் இருவர் நிற்பது தெரிந்தது. &#8220;இப்போது உன் குறி தவ்றினால் நம் உயிர் போய் விடும்&#8221; என்றார் இளங்கோ.இருவரும் அம்பை விடுத்தனர்.</p>
<p>குறி தப்பவில்லை.அலறலோடு இருவரும் அம்பு பட்டு கீழே விழுந்தனர். உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.சற்று நேரம் பதுங்கி இருந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றனர்.எதிரே இரண்டு பிட்சுக்கள் நடந்து வந்துகொண்டு இருந்தனர்.தூண் பின்னே ஒளிந்திருந்து கத்தியோடு பாய்ந்தனர்.சத்தம்போடாமல் இரண்டு பேர் காலியாயினர். மெதுவாக ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தபடி சென்றனர்.</p>
<p>ஒரு அறைக்குள் எட்டி பார்த்தபோது நிறைய பிட்சுக்கள் தூங்குவது தெரிந்தது.மெதுவாக உள்ளே நுழைந்தனர். சந்துரு இரு கைகளிலும் இரு கத்திகளை எடுத்தான்.தூங்கிய இருவர் நடுவே நின்றான்.அசந்து தூங்கினர் இருவரும்.கை நடுங்க கத்திகளை ஆவேசமாக இறக்கினான். கத்தி இறங்குமுன் அலறல் கேட்டது.அது இளங்கோ குத்திய இருவரின் அலறல்.</p>
<p>அனைவரும் பதறி அடித்துக்கொண்டு எழுந்தனர்.கோடாரியை எடுத்து சுற்றினான் சந்துரு.இரண்டு மூன்று பேர் கீழே விழும் சத்தம் கேட்டது.அதன் பின் விளக்கு எரிந்தது. 8 பேர் இறந்து கிடந்தனர். அறையின் நடுவே ரத்தக்கறை படிந்த கோடாரியுடன் இருவரும் நின்றிருந்தனர்.அவர்களை ஐந்து பிட்சுக்கள் சுற்றி வளைத்தனர்.</p>
<p>கராத்தே தெரியாத இருவர் என்ன தான் கோடாரியுடன் இருந்தாலும் கராத்தே தெரிந்த ஐவருக்கு சமமாவார்களா என்ன? கழுத்தில் கராத்தெ வெட்டு வாங்கி சந்துரு விழுந்தான்.அவனை மூவர் பிடித்து அமுக்கினர்.இளங்கோ ஒருவன் தலையை வெட்டினார்.ஆனால் அடுத்தவன் வெகு திறமையானவனாக இருந்தான்.அடிவயிற்றில் எத்து வாங்கி மயங்கி விழுந்தார்.பிட்சுகள் அவர்கள் இருவரையும் சங்கிலியால் தரையில் கட்டி போட்டனர்.</p>
<p>மீதமிருந்த நான்கு பிட்சுக்களும் பேயை பார்ப்பது போல் தரையில் கிடந்த அவர்கள் இருவரையும் பார்த்தனர்.தாங்கள் உயிரோடு இருப்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.</p>
<p>(தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/41/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/41/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/41/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=41&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை -3</title>
		<link>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-3/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-3/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jul 2007 05:59:37 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-3/</guid>
		<description><![CDATA[தான் வகையாக மாட்டிக்கொண்டதை பிட்சு உணர்ந்தார்.அவர் தற்காப்பு கலைகளில் மிகுந்த திறன் பெற்றவர்.அந்த இயக்கத்து பிட்சுகள் அனைவரும் தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள்.ஆனால் கைகால் கட்டிப் போடப்பட்ட நிலையில் பிட்சு செயலற்றவராக இருந்தார். பிட்சு முன் தன் மகளின் போட்டோவை நீட்டினார் இளங்கோ.&#8221;இவள் எங்கே இருக்கிறாள்?&#8221; என அமைதியாக கேட்டார்.பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிட்சு. முட்டியை மடக்கி அடிவயிற்றில் குத்தினார் இளங்கோ.&#8221;அம்மா..&#8221; என அலறினார் பிட்சு.தற்காப்பு கலைகளில் ஓரளவு வலி தாங்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் சித்ரவதையை ஓரளவுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=40&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தான் வகையாக மாட்டிக்கொண்டதை பிட்சு உணர்ந்தார்.அவர் தற்காப்பு கலைகளில் மிகுந்த திறன் பெற்றவர்.அந்த இயக்கத்து பிட்சுகள் அனைவரும் தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள்.ஆனால் கைகால் கட்டிப் போடப்பட்ட நிலையில் பிட்சு செயலற்றவராக இருந்தார்.</p>
<p>பிட்சு முன் தன் மகளின் போட்டோவை நீட்டினார் இளங்கோ.&#8221;இவள் எங்கே இருக்கிறாள்?&#8221; என அமைதியாக கேட்டார்.பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிட்சு.</p>
<p>முட்டியை மடக்கி அடிவயிற்றில் குத்தினார் இளங்கோ.&#8221;அம்மா..&#8221; என அலறினார் பிட்சு.தற்காப்பு கலைகளில் ஓரளவு வலி தாங்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் சித்ரவதையை ஓரளவுக்கு மேல் தாங்க முடியாது.</p>
<p>காலிங்பெல் அடித்தது.கதவை திறந்தால் சந்துரு.&#8221;வாயை திறக்க மாட்டேன் என்கிறான்&#8221; என்றார் இளங்கோ.இருவரும் பிட்சுவிடம் வந்தார்கள்.&#8221;என்ன அடிக்கவே ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறதே?&#8221; என சந்துரு கேட்க &#8220;இப்போதுதான் ஆரம்பித்தேன்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;அடி எல்லாம் சரிப்பட்டு வராது.போய் சூட்டுக்கோலை அடுப்பில் வைத்து எடுத்து வாருங்கள்&#8221; என்றான் சந்துரு.அவன் அம்மா அவனை அப்படித்தான் சின்ன வயதில் மிரட்டுவார்கள்.அந்த மிரட்டல் எப்போதும் வேலை செய்திருக்கிறது.பிட்சுவிடம் அதை கேட்டவுடன் கண்ணில் பயம் தாண்டவமாடியது.</p>
<p>&#8220;வேண்டாம்.சொல்கிறேன்.கட்டை அவிழ்த்து விடுங்கள்&#8221; என்றார்.</p>
<p>&#8220;நீ என்னை அடித்த அடி இன்னும் நினைவில் இருக்கிறது.கட்டை அவிழ்க்க முடியாது.அப்படியே சொல்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;நீங்கள் செய்வது நியாயமா?&#8221; என்றார் பிட்சு.&#8221;எங்கள் மதத்தில் இந்தியாவில் மட்டும் லட்சம் பேர் இருக்கிறார்கள்.அதில் முக்கால்வாசி பேர் பெண்கள்.இதில் இரண்டு போட்டோவை காட்டி இவர்கள் எங்கே என கேட்டால் எனக்கு எப்படி தெரியும்?அனைத்து மடங்களுக்கும் கடிதம் போடுகிறேன்.அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அப்போதுதான் தெரியும்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8221;இவன் சரிப்பட்டு வரமாட்டான்.சூட்டுக்கோலை எடுத்து வாருங்கள்.சூடு போடவேண்டுமென்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;நான் பொய் சொல்லவில்லை.என்னை கொன்றாலும் உண்மை இதுதான்&#8221; என்றார் பிட்சு.</p>
<p> &#8221;சரி.அனைத்து கிளைகளுக்கும் இமெயில் இருக்கிறதல்லவா?நான் உங்கள் சங்க வெப்சைட்டில் பார்த்திருக்கிறேன்.ஈமெயிலில் போட்டோவை அனுப்பி கேட்கிறோம்.உங்கள் மெயில் ஐடியும் பாஸ்வர்டும் கொடுங்கள்&#8221; என்றான் சந்துரு.</p>
<p>&#8220;நான் காணாமல் போனது இந்தியா முழுக்க அனைத்து கிளைகளுக்கும் இன்னேரம் தெரிந்திருக்கும்.நீ என் மின்னஞ்சலில் மெயில் அனுப்பினால் பதில் வராது.நீயும் அடுத்த நிமிடம் மாட்டி கொள்வாய்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;நிஜம் தான்&#8221; என்றார் இளங்கோ.&#8221;ஆனால் இது உண்மை என்றால் நீ சந்தோஷமாக மெயில் ஐடியை தந்து எங்களை மாட்டி விட்டிருப்பாய்.இதை சொல்லி இருக்க மாட்டாய்.ஆக மெயில் ஐடியில் ஏதோ விஷயம் இருக்கிறது.உன் பாஸ்வர்ட் என்ன,சொல்கிறாயா?&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.நான் காணாமல் போனதும் இந்நேரம் என் ஆபிஸ் இமெயில் ஐடியை முடக்கியிருப்பார்கள்.நீங்கள் லாகின் செய்தால் ஐபி கண்டுபிடித்து விடுவார்கள்.எனக்கு என் ஆபிஸ் ஐடி தவிர யாகூ ஐடி ஒன்று இருக்கிறது.நம்பலை என்றால் ஐடி பாஸ்வர்ட் தருகிறேன்.எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்.எனக்கென்ன?&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;சரி..உன் சங்கத்தை பற்றி சொல்.அதாவது தெரியுமல்லவா?இல்லை அதுவும் தெரியாதா?யார் உன் தலைவர்?இப்படி ஆள்பிடித்து அவர்களை என்ன செய்கிறீர்கள்?அதை ஒழுங்காகா சொல்லாவிட்டால் சூடு தான்&#8221; என்றான் சந்துரு.</p>
<p> &#8221;எங்கள் மதம் ஷின்ரிக்கியோ எனும் கொரிய மதமாகும்&#8221; என்றார் பிட்சு.&#8221;மனிதர்கள் உய்வடைய லீ ஷோகோ அசாரா எனும் மானிட உருவில் இறைவன் அவதாரம் எடுத்தார்.அவர் அளித்த வேதம் அவும் ஷென்ரிக்கியோ என அழைக்கப்படும்.இதில் சேருபவர்கள் துறவறம் பூண்டு மற்ற மக்களை கடவுளின் பாதையில் திருப்பும் பணியில் ஈடுபடுவார்கள்.உலகின் அனைத்து நாடுகளிலும் நாங்கள் இருக்கிறோம்.4 கோடி பேர் எங்கள் மதத்தில் உள்ளனர்.இதில் மர்மம் எதுவும் இல்லை&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;உங்கள் சங்க வெப் சைட்டில் இருப்பதையே ஒப்பிக்காதே&#8221; என எரிச்சலுடன் சொன்னார் இளங்கோ.&#8221;நீ உன் இமெயில் ஐடியை தா.அது முடக்கப்பட்டுள்ளதா என்ன என்பதை முதலில் சரிபார்க்கிறேன்&#8221; என்றார் இளங்கோ. எரிச்சலுடன் இமெயில் விவரத்தை தந்தார் பிட்சு.</p>
<p>லாகின் செய்ய ஈமெயில் திறந்தது.உள்ளே உள்ள மடல்களை பிரித்து படித்து கொண்டே வந்தனர். சந்துருவின் மனைவியின் போட்டோவை ஒரு மடலில் இணைத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார் பிட்சு.&#8221;புதிதாக சேர்ந்தவர்&#8221; என்ற ஒரே குறிப்புடன்.அதற்கு பதில் மடல் &#8220;ஆலயத்துக்கு அனுப்பி வைக்கவும்&#8221; என வந்திருந்தது.</p>
<p>பழைய மடல்களை மீண்டும் தேடியதில் இளங்கோவின் மகளுக்கும் அதே போல் மடல் பரிமாற்றம் நடந்திருந்தது தெரியவந்தது.</p>
<p>&#8220;பிட்சு பொய் சொல்லியிருக்கிறான்.அவனுக்கு எல்லாம் தெரியும்&#8221; என ஆவேசத்துடன் சொன்னார் இளங்கோ.</p>
<p>&#8212;-</p>
<p>அதே வினாடியில் பெங்களூரில் ஷென்ரிக்கியோ சங்க அலுவலகத்துக்கு ஒரு ஈமெயில் பறந்தது.பிட்சுவின் இமெயில் ஐடியையும்,சங்க வெப்சைட் நுழைவு அனுமதியையும் முடக்கும்படி.ஐடியை முடக்க முனைந்த கம்ப்யூட்டர் நிபுணர் அது லாகின் செய்யப்பட்டிருந்ததை கண்டார்.அந்த ஐபி அட்ரஸ் வினாடியில் போலிசுக்கு அனுப்பப்பட்டது. அடுத்த 10வது நிமிடத்தில் இளங்கோவின் வீட்டை நோக்கி போலிஸ் ஜீப் சீறிக்கொண்டு கிளம்பியது.</p>
<p>&#8211;</p>
<p>&#8220;என் மனைவியை எங்கே அனுப்பி வைத்தாய்?&#8221; என கோபத்துடன் பிட்சுவை கேட்டான் சந்துரு.</p>
<p>&#8220;சந்துரு&#8221; என்றார் இளங்கோ.&#8221;ஈமெயில் செயலிழந்து விட்டது.கண்டுபிடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்&#8221; என்றார் இளங்கோ.</p>
<p>&#8220;பிட்சு சொன்னது உண்மைதான்.போலிஸ் எந்நேரமும் நம்மை தேடி வரலாம்&#8221; என்றார்.</p>
<p>&#8212;</p>
<p>போலிஸ் இளங்கோவின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் மூவரும் அங்கு இல்லை.ஷெட்டில் நிறுத்தியிருந்த மாருதி காரும் இல்லை.விட்டை குடைந்த போலிசார் இளங்கோவின் புகைப்படம் கிடைக்காமல் ஏமாந்தனர்.அவர் வேலை செய்த கம்பனிக்கு அவரை பற்றி விசாரிக்க கிளம்பினர்</p>
<p> &#8212;</p>
<p>கோசல்ராம் சேட்டின் வீட்டு எதிரிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு முன் ஒரு மாருதி கார் வந்து நின்றது.பகலிலேயே கூட்டமில்லாத அந்த கோயிலுக்கு இரவில் வாட்ச்மேன் கூட இல்லை.காரிலிருந்து ஒரு உருவம் கேட்டை எட்டிதாண்டி உள்ளே போனது.உண்டியல் பூட்டை சுத்தியலால் உடைத்தது.அதிலிருந்த கவரை எடுத்தது.பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டது.</p>
<p> &#8212;-</p>
<p>&#8220;கவரில் என்ன இருக்கிறது?&#8221; என ஆர்வத்துடன் கேட்டார் இளங்கோ.</p>
<p>&#8220;வெற்றுபத்திரம் ஒன்றிலும்,பிளான்க் செக்புக்கிலும் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறார்.எனக்கு ஒரு கடிதமும் அவர் தம்பிக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.அவர் வீடு மற்றும் அனைத்து ஆஸ்திகளும் என் பெயரில் அந்த பத்திரத்தை பயன்படுத்தி மாற்றிக் கொள்ள சொல்லியிருக்கிறார்.தன் மகளை கண்டுபிடிக்கும் செலவுகளுக்கு அதை பயன்படுத்த சொல்லியிருக்கிறார்&#8221; என நெகிழ்ச்சியுடன் சொன்னான் சந்துரு.</p>
<p>&#8220;அந்த செக் செல்லுபடியாகாது.அவர் இறந்த செய்தி தெரிந்ததும் வங்கி கணக்கை முடக்கி இருப்பார்கள்&#8221; என சொல்லி சிரித்தார் பிட்சு. பின்சீட்டில் அவரை கட்டிபோட்டு உட்கார வைத்திருந்தார்கள்.சந்துரு அவரருகே அமர்ந்திருந்தான்.</p>
<p>&#8220;நண்பரை கொஞ்சம் கவனியுங்கள்&#8221; என்றார் இளங்கோ. &#8220;நீ ஏன் பொய் சொன்னாய்?&#8221; என கேட்டான் சந்துரு. &#8220;நீங்கள் போய் பார்ப்பதற்குள் ஈமெயில் ஐடி முடக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். சோம்பேறிகள்.லேட்டாக முடக்கினார்கள். நான் மாட்டிக்கொண்டேன்&#8221; என சொன்னார் பிட்சு.</p>
<p>&#8220;சரி ஆலயத்துக்கு அனுப்பு என்றால் என்ன?நீ எதற்கு இத்தனை பெண்கள் போட்டோவை அனுப்பினாய்?யாருக்கு அந்த மடல் அனுப்பினாய்?&#8221; என கேட்டான் இளங்கோ.</p>
<p>&#8220;தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினேன்.பெண்கள் போட்டோவை அனுப்பினேன் என சொல்வது தவறு.நீங்கள் தான் பார்த்தீர்களே.பல ஆண்கள் போட்டோவையும் அனுப்பியிருக்கிறேன்.எங்கள் மடத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சை வைப்பார்கள்.அதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்கள் எனக்கு அனுப்பப்படும்.அவர்களின் பயோடேட்டாவை கொரியாவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவேன்.அவர்கள் அதை பரிசீலித்து சில நபர்களை கொரியாவுக்கு வந்து குருவின் அருள் பெற சொல்லி அனுப்புவார்கள். அனுப்புவோம்.அதுதான் ஆலயம். இது மிகப்பெரும் பாக்கியம்&#8221; என பரவசத்துடன் சொன்னார் பிட்சு.</p>
<p>&#8220;என்ன பரிட்சை வைப்பீர்கள்?&#8221; என கேட்டான் சந்துரு. &#8220;எங்கள் வேதநூலில் இருந்துதான் கேள்வி கேட்போம்.அதுபோக கடவுளின் மொழியை(கொரிய மொழி) கற்று கொடுப்போம்.மற்றபடி பொது அறிவு சம்பந்தமாக சில கேள்விகள்.வினாத்தாள் மாதிரி எங்கள் சங்க வெப்சைட்டில் இருக்கும்.பார்த்து கொள்ளுங்கள்&#8221; என்றார் பிட்சு.</p>
<p>&#8220;அப்போது என் மனைவியும் இவர் மகளும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?&#8221; என கேட்டான் சந்துரு. &#8220;வடகொரியாவில்&#8221; என சொல்லி சிரித்தார் பிட்சு.</p>
<p>&#8220;எப்போது திரும்பி இங்கு வருவார்கள்?&#8221; என கேட்டார் இளங்கோ.</p>
<p>&#8220;இதுவரை அங்கு போன ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை&#8221; என்றார் பிட்சு.&#8221;அங்கு என்ன நடக்கிறது என கேட்டு என்னை அடிக்காதீர்கள்.எனக்கு சத்தியமாக தெரியாது&#8221; என்றார்.</p>
<p>&#8212;</p>
<p>அடுத்தநாள் காலை 10 மணிக்கு இந்திய வங்கி காண்டிவெளி கிளை அலுவலகத்தை திறந்தது.10.02க்கு டிப்-டாப்பாக உடை அணிந்து இளங்கோ உள்ளே நுழைந்தார்.சேட்டின் செக்கை நிரப்பி அக்கவுண்டிலிருந்த 816,000 ரூபாயில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் தவிர்த்து பூராத்தொகையயும் வித்ட்ரா செய்தார்.10.15க்கு வங்கியை விட்டு வெளியேறினார். 10.30க்கு வங்கி மேனேஜர் வந்தார்.சேட்டு கோசல்ராம் முந்தைய நாள் சாயந்திரம் மரணமடைந்த செய்தியை டைனிக் ஜாக்ரனில் 10.45க்கு படித்தார்.உடனடியாக அவர் கணக்கை மூட உத்தரவிட்டார்.அரைமணி நேரத்துக்கு முன் 815,000 எடுக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.தொலைபேசியை எடுத்து போலிசுக்கு தகவல் சொன்னார் மேனேஜர்.</p>
<p> &#8212;-</p>
<p>&#8220;வட கொரியாவுக்கு விசா எப்படி எடுப்பது?&#8221; என கேட்டான் சந்துரு.</p>
<p>நமட்டு சிரிப்பு சிரித்தார் பிட்சு.</p>
<p>&#8220;அங்கே போக விசா கிடைப்பது சிரமம்&#8221; என்றார் இளங்கோ.&#8221;அது சர்வாதிகார நாடு.அங்கே யாரும் போக மாட்டார்கள்.போனாலும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே போக அனுமதி கிடைக்கும்.கடுமையாக உளவுபோலிஸ் வேவு பார்ப்பார்கள்.அங்குள்ள மக்கள் எலிகளையும் பூச்சிகளையும் உண்டு வாழ்கிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>&#8220;நான் படித்து படித்து சொன்னேன்.நீங்கள் யாரும் கேட்கவில்லை&#8221; என்றார் பிட்சு.&#8221;சந்துரு நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே.மனதை திடப்படுத்திக்கொள்.உன் முன்னாள் மனைவி எங்கள் சங்க நிர்வாகியை திருமணம் செய்துகொண்டார்.இப்போது அவர்கள் இருவரும் கொரியாவில் சந்தோஷமாக தம்பதி சமேதராக மதபிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.நீ வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு புது வாழ்க்கையை துவங்கு&#8221; என்றார் பிட்சு.</p>
<p>அதிர்ச்சியில் உறைந்தான் சந்துரு.அவனுக்கு பேச்சே வரவில்லை.</p>
<p>&#8220;நித்தம் நித்தமே பொய்யடா பேசும் மாதர் சகவாசமே விட்டு உய்யடா&#8221; என சித்தர் பாடலை உற்சாகமாக பாடினார் பிட்சு.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/40/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/40/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/40/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/40/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/40/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=40&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை &#8211; II</title>
		<link>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-ii/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-ii/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jul 2007 05:51:44 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-ii/</guid>
		<description><![CDATA[வேன் மோதி நின்றதும் அனைவருக்கும் பலமாக அடிபட்டது.முன்சீட்டிலிருந்த சந்துரு கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே போய் விழுந்தான். மோத்தி குண்டு துளைத்த வினாடியே உயிரை விட்டிருந்தான்.வேன் அடித்து மோதிய ஜீப்பிலிருந்த போலிசார் பலர் கீழே அடிபட்டு கிடந்தனர். ஐரோலி பாலத்தில் கூட்டம் அலைமோதும்.இந்த களேபரத்தில் ஏகப்பட்ட வண்டிகள் குறுக்கே ஓடியதால் இன்னொரு போலிஸ் ஜீப்பில் இருந்தவர்களால் மானாவாரியாக சுட முடியவில்லை.ஆனால் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். துப்பாக்கி சத்தம் திடீரென கேட்டது.சந்துருவின் வேனிலிருந்து யாரோ போலிசை நோக்கி சுட்டனர்.குறி தவறினாலும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=39&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேன் மோதி நின்றதும் அனைவருக்கும் பலமாக அடிபட்டது.முன்சீட்டிலிருந்த சந்துரு கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே போய் விழுந்தான்.</p>
<p>மோத்தி குண்டு துளைத்த வினாடியே உயிரை விட்டிருந்தான்.வேன் அடித்து மோதிய ஜீப்பிலிருந்த போலிசார் பலர் கீழே அடிபட்டு கிடந்தனர்.</p>
<p>ஐரோலி பாலத்தில் கூட்டம் அலைமோதும்.இந்த களேபரத்தில் ஏகப்பட்ட வண்டிகள் குறுக்கே ஓடியதால் இன்னொரு போலிஸ் ஜீப்பில் இருந்தவர்களால் மானாவாரியாக சுட முடியவில்லை.ஆனால் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். துப்பாக்கி சத்தம் திடீரென கேட்டது.சந்துருவின் வேனிலிருந்து யாரோ போலிசை நோக்கி சுட்டனர்.குறி தவறினாலும் போலிஸ் உஷாராக அதுபோதுமானதாக இருந்தது.</p>
<p>அவர்களிடம் கட்டை துப்பாக்கிகள் இருந்தன.பதுங்க இடம் தேடி அவர்கள் ஓட அதற்குள் இரண்டு போலிஸார் குண்டடி பட்டு விழுந்தனர். துப்பாக்கி வெடித்ததும் அங்கு மக்கள் சிதறி ஓடினர்.</p>
<p>வேன் கதவை திறந்து பிட்சுவை தூக்கி தானே ஆற்றில் வீசினார் இளங்கோ.அவரும் ஆற்றில் குதித்தார். சந்துரு எழுந்தான்.உடலெங்கும் வலி.பட்டகாலிலே படும் என்பதுபோல் அடிபட்ட காலில் மீண்டும் வலி.கையில் எந்த ஆயுதமும் இல்லை.போலிஸ் வேனை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தனர்.சுற்றிலும் மக்கள் சிதறி ஓடினர்.இனி செய்ய ஏதுமீலை என உணர்ந்த சந்துரு மக்களோடு மக்களாக அவர்களோடு சேர்ந்து ஓடினான்.தானே பெலாபூர் ரோட்டுக்கு ஓடி நின்றான்.உடலெங்கும் ரத்தம்,காயம்.ஆட்கள் அவனை வித்யாசமாக பார்த்தனர்.ஆனால் விடு விடு என நடந்து போனான்.</p>
<p>இளங்கோ தப்பியது அவனுக்கு தெரியாது.வேனில் இருந்தவர்கள் என்ன ஆனார்களோ என்ற பீதி வாட்டியது. டெலிபோன் பூத்தில் காசை போட்டு சேட்டுக்கு தகவல் சொன்னான்.மகன் இறந்துவிட்டான் என்பதை பதட்டத்தில் சொல்லி விட்டான்.சொன்னபின் நாவை கடித்து கொண்டான். &#8220;மகனும் போய்விட்டான்.மகளும் போய்விட்டாள்.வேனை அடையாளம் கண்டுபிடித்து போலிஸ் வருவது நிச்சயம்.நான் ஓடி தப்பிக்க முடியாது.வயதாகிவிட்டது&#8221; என்றார் சேட்டு.&#8221;முடிந்தால் என் மகளை அங்கிருந்து மீட்டு என் தம்பி வீட்டில் விட்டு விடு.இல்லாவிட்டால் விதி விட்ட வழி&#8221; என்றார் அவர்.&#8221;என் வீட்டு எதிரில் உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலில் ஒரு பொட்டலத்தை போடுகிறேன்.உனக்கு அது மிக உதவும்.அடுத்த திங்கட்கிழமைக்குள் உண்டியலை உடைத்து அதை எடுத்துக்கொள்.இல்லாவிட்டால் அது பிள்ளையாருக்கு போயிடும்.உண்டியலை திங்களன்று தான் திறப்பார்கள்&#8221; என்றார் சேட்டு.போனை வைத்து விட்டார்.</p>
<p>சந்துரு வெளியே வந்தான்.எங்கே போவது என தெரியவில்லை.அவன் அடையாளம்,பேர்,ஊர் தெரிந்தவர் இளங்கோ ஒருவர்தான்.அவரை தவிர வேனில் இருந்த அனைவருக்கும் புனை பெயர் ஒன்றை தான் சொல்லி இருந்தான்.இளங்கோ அப்போது புனை பெயர் சொல்ல சொன்னது எவ்வலவு உதவியானது என நினைத்துக்கொண்டான்.ஆனால் இளங்கோ மாட்டினால் அவனும் மாட்டுவது உறுதி. அவன் தங்கி இருந்த விடுதிக்கு சென்று அவசர அவசரமாக இடத்தை காலி செய்தான்.போலிஸ் அங்கு வந்தால்,விசாரித்தால் அவன் அட்ரஸ் கிடைப்பது உறுதி.என்ன செய்வது என யோசித்துக்கொண்டே ஓட்டலை விட்டு வெளியே வந்தான்.</p>
<p>&#8220;சாப்..போன்&#8221; என சத்தம் கேட்டது.ஓட்டல் பையன் வந்து அழைத்தான்.போய் போனை எடுத்தான்&#8230;.இளங்கோ.</p>
<p>&#8220;இங்கே தான் இருக்கிறாயா?ஒரு நப்பாசையில் தான் அழைத்தேன்.வேனில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர்.இருவர் பிடிப்பட்டனர்.பிட்சுவை இழுத்துக்கொண்டு நான் தப்பி விட்டேன்.என் வீட்டில் கட்டி வைத்திருக்கிறேன்.உடனே கிளம்பி வா&#8221; என்றார்.</p>
<p>நிம்மதி பெருமூச்சு விட்டான் சந்துரு.புது நம்பிக்கை அவன் மனதில் பிறந்தது. இளங்கோ தவிர வேனில் இருந்த யாருக்கும் அவன் அடையாளம் தெரியாது.இந்த ஓட்டல் ரெஜிஸ்டரில் மட்டுமே அவன் அட்ரஸ் இருந்தது.ஆனால் போலிஸ் இங்கு மோப்பம் பிடித்து வரப்போவதில்லை. ஆக இப்போது சந்துரு சுதந்திர மனிதன். ஆனால் அவன் மனைவி எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன ஆச்சு என்பது முதலில் தெரியவேண்டும்.அது தெரிந்த ஆள் அந்த பிட்சு தான். &#8220;பிட்சு &#8230;உனக்கு சாவு என் கையால் தான்&#8221; என சந்துரு முணுமுணுத்தான்.</p>
<p>டாக்ஸி பிடித்து இளங்கோ வீட்டுக்கு போனான்.வழியில் மாலை செய்தித்தாளில் &#8220;மும்பையில் துப்பாக்கி சண்டை&#8221; என கடைகளில் தொங்க நிறுத்தி பேப்பர் வாங்கினான். வேனில் இருந்தவர்களில் இருவர் செத்துவிட்டனராம்.மூவர் பிடிபட்டனராம்.விசாரனை நடக்கிறதாம்.அவர்கள் அடிதாங்க மாட்டார்கள் என்பது சந்துருவுக்கு தெரியும்.சங்க உறுப்பினர்கள் மற்றவர்கள் பேரை சொல்லிவிடுவார்கள்.சேட்டையும் சீக்கிரம் பிடித்து விடுவார்கள்.சங்கம் மொத்தமும் காலி&#8230;.இவனையும் இளங்கோவையும் தவிர.</p>
<p>&#8220;விடமாட்டேன்&#8230;உங்கள் ஒவ்வொருவர் வீட்டு பெண்ணையும் மீட்பேன்&#8221; என சொல்லிக்கொண்டன் சந்துரு.அசாத்தியமான உறுதி அவன் மனதில் வந்திருந்தது.அவன் கண்ணில் கொலைவெறி தாண்டவமாடியது.சாகதுணிந்தவனுக்கு வரும் உறுதி அப்போது அவன் மனதில் நிரம்பியது.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p>சேட்டு கோசல்ராம் பிள்ளையார் கோயிலுக்கு போனார்.ஒரு கவரை சந்துருவின் புனை பெயர் எழுதி உண்டியலுக்குள் திணித்தார்.கையோடு கொண்டு சென்ற ஜிலேபியை விழுங்கினார்.உள்ளே கலந்திருந்த விஷத்தால் ஜிலேபி கசந்தது.தொந்தியப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டார்.தள்ளாடியபடி வெளியே நடந்து வந்தார்.தலை சுற்றியது.நடைபாதையில் அப்படியே உட்கார்ந்தார். தன் வீட்டு முன் போலிஸ் ஜீப் பிரேக் போட்டு நிற்பது போல் காட்சி தெரிந்தது.அது நிஜமா பிரமையா என தெரியவில்லை.கண்னை கசக்கினார்.</p>
<p>சின்ன வயது மோத்தியும்,மீராவும் கண்ணில் தெரிந்தனர்.இதுவும் நிஜமா பிரமையா&#8230;.. &#8220;மோத்தி..மீரா.. &#8220;என முணுமுணுத்தார் சேட்டு.தங்கை மேல் அவ்வளவு பாசம் மோத்திக்கு.&#8221;மீரா கே லியே குச்ச் பீ கரேகா&#8221; (மீராவுக்காக எதையும் செய்வேன்)என அடிக்கடி சொல்லுவான்.அது பொய்யில்லை.உண்மைதான்&#8230;.</p>
<p>மகனையும் மகளையும் நினைத்தபடி கோசல்ராம் சேட் சந்தோஷமாக செத்து போனார்.</p>
<p> &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p>சந்துருவின் டாக்ஸி இளங்கோ வீட்டை நோக்கி சென்றது. இளங்கோ வீட்டில் பிட்சு கண்விழித்தார்.அவர் எதிரே அவரை உற்று பார்த்தபடி இளங்கோ அமைதியாய் அமர்ந்திருந்தார்.&#8221;குட் ஈவினிங்&#8221; என்று சொன்னார் இளங்கோ</p>
<p>(தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/39/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/39/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/39/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/39/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/39/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=39&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-ii/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அஞ்சேல் எனாத ஆண்மை</title>
		<link>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jul 2007 05:47:52 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[novel]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/</guid>
		<description><![CDATA[  இத்தனை நாள் வராத ஆசை ஒன்று என்னை திடீரென பிடித்து கொண்டது.அதாவது கதை எழுதவேண்டும் என்பதுதான். குட்டிகதைகள் சில எழுதியிருக்கிறேன்.இருப்பினும் பெரிய தொடர்கதை ஒன்று எழுதவேண்டும் என ஆசை.இது கொஞ்சம் நீண்ட தொடர்.வலைபதிவில் தொடர்கதை எந்த அளவு வெற்றி அடையும் என தெரியவில்லை.ஆனாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்.வார வாரம் மூன்று எபிசோட்கள் தர எண்ணியுள்ளேன் முன்னுரை சந்திரசேகரன் நீண்டநாள் வெளியூர் சுற்றுப்பயணம் போய்விட்டு திரும்பி வந்தான்.வந்தபோது அவன் மனைவி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=38&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>  இத்தனை நாள் வராத ஆசை ஒன்று என்னை திடீரென பிடித்து கொண்டது.அதாவது கதை எழுதவேண்டும் என்பதுதான்.</p>
<p>குட்டிகதைகள் சில எழுதியிருக்கிறேன்.இருப்பினும் பெரிய தொடர்கதை ஒன்று எழுதவேண்டும் என ஆசை.இது கொஞ்சம் நீண்ட தொடர்.வலைபதிவில் தொடர்கதை எந்த அளவு வெற்றி அடையும் என தெரியவில்லை.ஆனாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்.வார வாரம் மூன்று எபிசோட்கள் தர எண்ணியுள்ளேன்</p>
<p>முன்னுரை</p>
<p>சந்திரசேகரன் நீண்டநாள் வெளியூர் சுற்றுப்பயணம் போய்விட்டு திரும்பி வந்தான்.வந்தபோது அவன் மனைவி காணாமல் போயிருந்தாள்.எஙெங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.போலிஸ் புகார் கொடுத்தான்.பிறகு எதேச்சையாய் அவள் டயரி சிக்க அதில் “ஷென்ரிக்கியோ” என அடிக்கோடிட்டு எழுதப்பட்டிருந்தது.</p>
<p>டயரியை எடுத்துக்கொண்டு போலிஸிடம் போனான்.விசாரித்து பார்த்ததில் அது கொரியாவில் உள்ள ஒரு கல்ட்டின்(Cஉல்ட்) பெயர் என தெரியவந்தது.அந்த மதம் புதிதாக துவங்கப்பட்டது என்றும் லீ என்ற மததலைவர் துவக்கியது என்றும் என்றும் தெரியவந்தது. சந்திரசேகரனின் மனைவி அம்மதத்தில் சேர்ந்து துறவியாகிவிட்டாள்.ஏன் அதில் திடீரென்று சேர்ந்தாள்,அவளை மீண்டும் பார்க்க முடியுமா என சந்திரசேகரனுக்கு புரியவில்லை.அந்த கல்டின் மும்பை கிளையில் விசாரிக்க முடிவு செய்து மும்பை கிளம்பினான்.</p>
<p>அந்த கல்ட்டின் அலுவலகம் சென்றபோது வெளியே அழுதுகொண்டு ஒருவர் நின்றிருந்தார்.என்ன விஷயம் என விசாரித்தபோது அவர் மகள் திடீரென இந்த மதத்தில் சேர்ந்து விட்டதாகவும்,அதன் பின் அவரை பார்க்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.போலீசில் புகார் கொடுத்தபோது எந்த ஆதாரமும் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.எப்படி இவர்கள் ஆட்களை சேர்க்கிறார்கள்,அதன்பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என எதுவுமே தெரியவில்லை என சொல்லி புலம்பினார்.சந்துருவுக்கு பகீரென்றது.</p>
<p>இப்படி இந்த கல்ட்டால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து ஒரு ரகசிய சங்கம் அமைத்திருப்பதாகவும் அவரவர் குடும்ப உறுப்பினர்களை மீட்பதே லட்சியம் என்றும் சொன்னார். சந்துரு தான் அந்த ஆபீசில் சென்று பேசிப்பார்ப்பதாக சொல்லி உள்ளே போனான்.உள்ளே ஒரு பிட்சு இருந்தார்.அவன் மனைவியை பார்க்க விரும்புவதாய் சொன்னான் சந்துரு.</p>
<p>“உன் மனைவி பிக்குணி ஆகிவிட்டாள்.பார்க்க முடியாது.எங்கள் மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அவளை பார்க்க முடியும்” என்றார் பிட்சு.”அப்படியானால் நான் உங்கள் மதத்தில் உடனடியாக சேர்கிறேன்.அதன்பின் பார்க்க முடியுமா?” என கேட்டான் சந்துரு.</p>
<p>(இனி….)</p>
<p>Pஅர்ட் 1</p>
<p> ”எங்கள் மதத்தில் சேர்வது அவ்வளவு சுலபமா?” என்று சிரித்தார் பிட்சு.”உன் முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என்பதற்காக சும்மாவாச்சும் சொல்கிறாய்.உண்மையிலேயே எங்கள் மதத்தில் சேரணும் என்றால் எங்கள் கோயில் இந்த முகவரியில் இருக்கிறது.அங்கே போய் பிட்சுகளை அணுகு” என சொல்லி ஒரு பேம்ப்லெட்டை கொடுத்தார்.</p>
<p>“உங்களை எல்லாம் ஒழிச்சு கட்டாம விடமாட்டேண்டா” என சந்துரு சத்தம் போட்டான்.பிட்சு மேல் பாய்ந்தான்.டேபிளை மேல் ஏறி அவர் முகத்தில் ஒரு குத்து விட முயன்றான்.</p>
<p>அவர் அவனை எளிதில் தடுத்தார்.அவன் காலில் ஒரு கராத்தே தட்டு தட்ட அவன் கீழே விழுந்தான். சந்துருவுக்கு சண்டை பிடிக்க எல்லாம் தெரியாது.பள்ளியில் கிரிக்கட் ஆடியதோடு சரி,அதன் பின் உடற்பயிற்ச்சியே கிடையாது.பிட்சு பார்க்க பசு மாதிரி இருந்தார்.ஆனால் ஏதோ தற்காப்பு கலை பயின்றவர் போல் இருந்தது.அவரிடம் நாலைந்து அடி வாங்கியதும் சந்துரு நிலைகுலைந்து போனான்.</p>
<p>விண்,விண் என வலி எடுத்தது.நொண்டி,நொண்டி வெளியே நடந்து வந்தான்.வெளியே அவனை உள்ளே போக வேண்டாம் என்று சொன்ன நபர்(இளங்கோ) நின்றிருந்தார்.</p>
<p>“எனக்கும் இதுதான் நடந்தது” என அவனை பார்த்ததும் சொன்னார்.</p>
<p>“இவனுகளை ஒழிக்கணும்.வெடிகுண்டு கட்டிட்டு போக தயார்” என ஆவேசத்துடன் சொன்னான் சந்துரு.</p>
<p>“இவனை கொன்னா ஆச்சா?என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலை.உங்க சம்சாரம் எங்க இருக்காங்கன்னு தெரியலை.ஆவேசம் பிரயோஜனபடாது” என்றார் இளங்கோ.</p>
<p>“இவங்க யாரு?ஏன் இப்படி பண்றாங்க?” என புரியாமல் கேட்டான் சந்துரு.</p>
<p>“யாருக்கும் தெரியலை.எங்க வீட்டுக்கு நன்கொடைன்னு கேட்டு ரெண்டு பிட்சுணிகள் வந்தாங்க.என் மகள்,மனைவி கிட்ட சகஜமா பேசினாங்க.நான் ஆபிஸ் மும்முரத்துல இதை கண்டுக்கவே இல்லை.கொஞ்ச நாள் கழிச்சு அவங்க கோயிலுக்கு என் மகள் அடிக்கடி போக ஆரம்பிச்சா.திடீர்னு ஒரு நாள் பிட்சுணி ஆகப்பொறேன்னு சொன்னா.எவ்வளவு சொல்லியும் கேக்கலை.கோயிலுக்கு இனி மேல் போக கூடாதுன்னு தடுத்தோம்.நைட்டோடு நைட்டா வீட்டை விட்டு போயிட்டா.அதுக்கப்புறம் ஒரு தகவலும் இல்லை” என சொன்னார் இளங்கோ.</p>
<p>“இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள்ன்னு சொன்னீங்களே,அங்க எதாவது உருப்படியான தகவல் கிடைச்சதா?” என கேட்டான் சந்துரு.</p>
<p>“எல்லார் வீட்டிலும் இதே கதைதான் நடந்திருக்கு.சகஜமா பேசி கோயிலுக்கு கூப்பிடுவாங்க.அங்கபோன கொஞ்ச நாள் கழிச்சு பிட்சு ஆறேன்,பிட்சுணி ஆறேன்னு ஓடினவங்க தான் அதிகம்.எல்லா வயசு ஆண்களும்,பெண்களும் இப்படி ஓடிருக்காங்க..” என்றார் இலங்கோ</p>
<p>“ஒருத்தரை பத்தியும் தகவல் கிடைக்கலையா?” என கேட்டான் சந்துரு.</p>
<p>“எல்லாத்தையும் ரோடில் நின்னுகிட்டே பேச முடியுமா?இன்னைக்கு சாயந்திரம் ஒரு சேட்டு வீட்டுல சங்க மீட்டிங் நடக்குது.அங்க வாங்க தெளிவா பேசலாம்,இப்ப முதல்ல டாக்டர் கிட்ட போலாம்.உங்க கால் வீங்கிருக்கு” என சொன்னார் இளங்கோ.</p>
<p>இளங்கோவும் சந்துருவும் அந்த மீட்டிங்குக்கு போனபோது இரவாயிருந்தது.&#8221;மீட்டிங்க்ல உங்க நிஜ பேரையும் ஊரையும் சொல்ல வேண்டாம்&#8221; என இளங்கோ எச்சரித்தார்.ஏன் என்று கேட்டதற்கு அப்புறம் சொல்றேன் என சொன்னார்.அது என்ன காரணமாக இருக்கும் என யோசித்துக்கொண்டே சந்துரு போனான்.</p>
<p>மீட்டிங் என்று சொன்னாரே தவிர 10 பேர் மட்டும் தான் இருந்தனர்.சந்துருவும் இளங்கோவும் மட்டுமே தமிழர்கள்.மற்ற அனைவரும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள்.அனைவரும் தங்கள் சோக கதைகளை சொன்னார்கள்.இனி என்ன செய்வது என ஆலோசித்தனர்.</p>
<p>சந்துரு கவனித்தவரை சங்கத்து உறுப்பினர்கள் யாரும் பணக்காரர்களோ,செல்வாக்கு படைத்தவர்களாகவோ இருக்கவில்லை.சராசரியான மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருந்தனர்.பாதி பேர் நடுத்தர வயதை தாண்டியவர்கள். என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.உருப்படியான எந்த ஐடியாவும் வரவில்லை.</p>
<p>சந்துரு எழுந்து ஒரு ஐடியா சொன்னான்.அதாவது அந்த மடத்தின் முக்கிய புள்ளி ஒருவர் வீட்டில் புகுந்து அதிரடியாய் மிரட்டி அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை அறியவேண்டும்.முடிந்தால் தம் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.</p>
<p>மும்பையில் அந்த மடத்தின் பெரும்புள்ளி சந்துருவை அடித்த பிட்சுதான்.அவரை கடத்துவது என முடிவு செய்தார்கள்.கடத்த தன் மாருதி வேனை தருவதாக சேட்டு சொன்னார்.தன் மகனையும் உதவிக்கு அனுப்புவதாக சொன்னார்.</p>
<p>அந்த கூட்டத்தில் யாருக்கும் முன்பின் அப்படி ஒரு காரியம் செய்து பழக்கமில்லை.ஆனால் உற்சாகமாக களத்தில் இறங்கினர்.</p>
<p>வேனுக்கு பெயின்ட் மாற்றி,போலி எண்களை எழுதினார் சேட்டு.கள்ள கைதுப்பாக்கிகள் சிலவற்ரை தந்தார் இன்னொருவர். பிட்சுவின் நடவடிக்கைகளை கண்காணித்து உளவு சொல்லும் பொறுப்பை ஒருவர் ஏற்ருக்கொண்டார்.</p>
<p>பிட்சு அப்படி ஒன்றும் பாதுகாப்பாக உலா வரவில்லை.பெரும்பாலான இடங்களுக்கு மொப்பெட்டில் தான் போனார்.அவர் வீட்டருகே தீயணைப்பு நிலையம் இருந்ததால் வீடு புகுந்து அடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.வழியில் கடத்த முடிவு செய்தனர்.</p>
<p>மடத்து ஆபிஸ் வாசலில் வேன் நின்றது.பிட்சு வெளியே வந்தார்.மோப்பட்டில் ஏறினார்.சேட்டு மகன் மோத்தி வேனை எடுத்தான்.மொப்பட் பின்னால் வேனை மோத பிட்சு கீழே விழுந்தார்.மொப்பட்டுக்கு அடியில் மாட்டிக்கொண்டார்.</p>
<p>சந்துருவும் இருவரும் கீழே குதித்து பிட்சுவை உருட்டு கட்டையால் அடித்தனர்.அவரை தூக்கி வேனில் போட்டனர்.வேன் சீறிக்கொண்டு கிளம்பியது.</p>
<p>மடத்து வாட்ச்மேன் அதிர்ச்சி அடைந்து உள்ளே ஓடி போலிஸுக்கு போன் செய்தான்.சிக்னல் அருகே வேன் நிற்கும்போது வயர்லெஸ்சில் மும்பை முழுக்க தகவல் பறந்தது.போலிஸ் ஜீப் ஒன்று வேனை துரத்த துவங்கியது.</p>
<p>உள்ளே இருந்த அனைவரும் பீதி அடைந்தனர்.மோதி மட்டும் பயப்படவில்லை.போலிஸ் ஜீப்புக்கு தண்ணி காட்டினான்.குடித்து விட்டு இரவில் வண்டியை வேகமாக ஓட்டி அவனுக்கு பழக்கம்.ஆனால் ரொம்ப நேரம் தண்ணி காட்ட முடியவில்லை.இரண்டு மூன்று ஜீப்கள் துரத்த ஆரம்பித்தன.</p>
<p>ஐரோலி பாலத்தில் வேனை இரண்டு பக்கமும் சுற்றி வளைத்தனர். &#8220;என்ன செய்வது&#8221; என பீதியுடன் கேட்டார் இளங்கோ. மோத்தி அக்சிலரேட்டரில் காலை வைத்தான்.ஒரே அழுத்து.நேராக போலிஸ் ஜீப்பை நோக்கி கொலைவெறியுடன் பாய்ந்தது வேன்.</p>
<p>போலிஸ் முதலில் டயர்களில் சுட்டார்கள்.அதன்பின் அடுத்த குண்டு மோதியின் தலையில் பாய்ந்தது.ஆனால் அதற்குள் வேன் ஜீப்பை அடித்து நொறுக்கி முன்சென்றது.பாலத்து சுவற்றில் மோதி நின்றது. (தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/38/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/38/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/38/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/38/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/38/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=38&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/07/28/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>30.தாயைக் காத்த வைணவர்கள்</title>
		<link>http://holyox.wordpress.com/2007/02/23/30%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/02/23/30%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 23 Feb 2007 04:49:52 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[Culture]]></category>
		<category><![CDATA[Philosophy]]></category>
		<category><![CDATA[Religion]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/02/23/30%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும். சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான். தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=34&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://photos1.blogger.com/blogger/3139/2118/1600/images.21.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.21.jpg" style="float:left;cursor:hand;margin:0 10px 10px 0;" /></a> விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும். சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.</p>
<p>தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது. மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.</p>
<p>மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை. வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்.</p>
<p>வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வனஅன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா</p>
<p>இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்)</p>
<p>இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார். பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள்.</p>
<p>ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல்.</p>
<p>&#8220;ஆயிழையைத் தீண்டான்&#8221; என எழுதுகிறார் கம்பர். சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை. பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார்.</p>
<p>இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை. சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார். ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார். நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான். பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார். ராவணனை கொல்கிறார். அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார்.</p>
<p> 16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார். ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார். வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு. சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா?</p>
<p>தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை. தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/34/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/34/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/34/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/34/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/34/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=34&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/02/23/30%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>

		<media:content url="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.21.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>29.வீரபாண்டிய கவுண்டமணி</title>
		<link>http://holyox.wordpress.com/2007/02/23/29%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/02/23/29%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 23 Feb 2007 04:47:55 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[Comedy]]></category>
		<category><![CDATA[Light reading]]></category>
		<category><![CDATA[Short stories]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/02/23/29%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர்.கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா? கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை ஜாக்சன்:&#8221;நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?&#8221; கவுண்டர்:&#8221;ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா.நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?&#8217; ஜாக்சன்:&#8221;ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?&#8217; கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=33&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://photos1.blogger.com/blogger/3139/2118/1600/images.20.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.20.jpg" style="float:left;cursor:hand;margin:0 10px 10px 0;" /></a> வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர்.கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா?</p>
<p>கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை</p>
<p>ஜாக்சன்:&#8221;நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?&#8221;</p>
<p>கவுண்டர்:&#8221;ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா.நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?&#8217;</p>
<p>ஜாக்சன்:&#8221;ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?&#8217;</p>
<p>கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பன்னிக்குட்டி மாதிரி இருக்கே? கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?&#8221;</p>
<p> செந்தில்:&#8221;அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க.டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்&gt;&#8221;</p>
<p>கவுண்டர் :&#8221;அப்படியாடா சொல்றே?&#8221;(பயத்துடன் திரும்பி) &#8220;நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர்.அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்&#8221;</p>
<p>ஜாக்சன்:&#8221; நட்பு வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்&#8221;</p>
<p> கவுண்டர்: &#8220;இல்லைங்க ஆபீசர்.நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர்.இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?&#8221; ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார். ஜாக்சனுக்கு கோபம் வருகிறது.</p>
<p> ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.</p>
<p>கவுண்டர்:&#8221;என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்&#8221;</p>
<p>ஜாக்சன்: &#8220;சொன்னால் எண்ணிக்கை தெரியாது.&#8221;</p>
<p>கவுண்டர்: (நக்கலாக)&#8221;ஓ ஐ ஆம் சாரி.நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்) ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?&#8221;</p>
<p>ஜாக்சன்:&#8221;எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகம் பிடித்தவனே,சொல்கிறேன் கேள். பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை&#8221;</p>
<p> கவுண்டர்: &#8220;வானம் பொழியுது,பூமி விளையுது.நடுவுல வெள்ளைப் பன்னி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்?நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா? என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?&#8221;</p>
<p>ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார்.</p>
<p>ஜாக்சன்: &#8220;என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்&#8221;</p>
<p>கவுண்டர்: &#8220;ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ&#8221; மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார். <!--thamizmanam.pdf.end--></p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/33/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/33/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/33/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/33/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/33/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=33&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/02/23/29%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>

		<media:content url="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.20.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>28.காதலிக்காக $12,000</title>
		<link>http://holyox.wordpress.com/2007/02/23/28%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-12000/</link>
		<comments>http://holyox.wordpress.com/2007/02/23/28%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-12000/#comments</comments>
		<pubDate>Fri, 23 Feb 2007 04:45:38 +0000</pubDate>
		<dc:creator>Selvan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://holyox.wordpress.com/2007/02/23/28%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-12000/</guid>
		<description><![CDATA[காதலர் தினத்தில் சராசரியாக ஒரு அமெரிக்க காதலன் தன் காதலிக்காக $128 செலவு செய்கிறான். அமெரிக்க காதலி $74 செலவு செய்கிறாளாம். பெரும்பாலும் இத்தொகை பூக்கள்,சாக்லட்,கிரீடிங் கார்ட் மற்றும் டின்னருக்கு செலவாகிறதாம். முத்தம் இல்லாமல் காதலர் தினமா?மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க பெண்கள் காதல் தினத்தன்று &#8220;நறுமணம்&#8221; வீசும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பார்களாம் (குளோசப் கவனிக்க) காதலர் தினத்தன்று $128 செலவு செய்யும் காதலன் வருடம் முழுவதும் எவ்வலவு செலவு செய்வானாம்?அதிகமில்லை ஜென்டில்மென்.$12,000 என்கிறது பெஸ்ட் லைப் பத்திரிக்கை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=32&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://photos1.blogger.com/blogger/3139/2118/1600/images.19.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.19.jpg" style="float:left;cursor:hand;margin:0 10px 10px 0;" /></a> காதலர் தினத்தில் சராசரியாக ஒரு அமெரிக்க காதலன் தன் காதலிக்காக $128 செலவு செய்கிறான். அமெரிக்க காதலி $74 செலவு செய்கிறாளாம். பெரும்பாலும் இத்தொகை பூக்கள்,சாக்லட்,கிரீடிங் கார்ட் மற்றும் டின்னருக்கு செலவாகிறதாம்.</p>
<p>முத்தம் இல்லாமல் காதலர் தினமா?மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க பெண்கள் காதல் தினத்தன்று &#8220;நறுமணம்&#8221; வீசும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பார்களாம் (குளோசப் கவனிக்க) காதலர் தினத்தன்று $128 செலவு செய்யும் காதலன் வருடம் முழுவதும் எவ்வலவு செலவு செய்வானாம்?அதிகமில்லை ஜென்டில்மென்.$12,000 என்கிறது பெஸ்ட் லைப் பத்திரிக்கை நடத்திய சர்வே.</p>
<p>இந்த $12,000ல் பூக்களுக்கு மட்டும் $300, டின்னருக்கு $2526, தியேட்டர், கன்சர்ட்டுக்கு $752. 50 வருடங்களில் ஆண் மனைவுக்கு செய்யும் செலவு தொகை $590,400 (விலைவாசி அட்ஜஸ்ட் செய்தபிறகு) இதெல்லாம் கலாச்சார ஜென்டர் ரோல்களின் தாக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.</p>
<p>ஆண்கள் தான் காதலிக்கு செலவு செய்ய வேண்டும் என்பது ஐரோப்பிய கலாச்சாரம். காதலர் தினத்தன்று டட்ச் டிரீட்(உன் பில்லை நீ கட்டு,என் பில்லை நான் கட்டுகிறேன்) செய்யும் காதலனை எந்த பெண்ணாவது மதிப்பாளா?அல்லது காதலிக்கு பூ,நகை என வாங்கித்தராமல் காதலை சொல்லத் தான் முடியுமா? புத்திசாலி காதலர்கள் 50/50 என்ற விகிதத்தில் செலவு செய்வதும் உண்டாம்.</p>
<p>சில பெண்ணுரிமையை நம்பும் பெண்கள் முழு தொகையையும் காதலன் தலையில் கட்டுவதில்லை.50:50 என செலவுத் தொகையை பகிர்ந்து கொள்கிறார்கள். யாரையும் நம்பி நான் இல்லை என்பது அவர்கள் வாதம். யார் காசு கொடுத்தா என்ன, கல்லா நிறைஞ்சா போதாதா என்கின்றனர் கடைக்காரர்கள்.</p>
<p>காதலர் தினத்தன்று மட்டும் $13.7 பில்லியன்(ரூ50,000 கோடி) அளவுக்கு விற்பனை அதிகமாகிறதாம்.இப்படி இருக்கும்போது காசு யார் கட்டுகிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தால் முடியுமா? இதில் பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன.காதலர் தினத்தில் அதிகமாக செலவு செய்பவர்கள் 45 &#8211; 54 வயதினராம். தலைக்கு $135 (ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சமமாக) செலவு செய்கின்றனராம்.குறைந்த அளவில் செலவு செய்பவர்கள் 18 &#8211; 24 வயதினராம்($81 மட்டுமே.)இரண்டு வருடத்துக்கு முன் $153 செலவு செய்தார்களாம் இவர்கள்.(பாக்கட் மணி அப்பன் கிட்ட சண்டை புடிச்சு வாங்குங்க கண்ணுகளா)</p>
<p>பூரா தொகையையும் காதலன் காதலிக்கே செலவு செய்வதில்லை. குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு $ 20 செலவு செய்கிறார்களாம். நண்பர்களுக்கு $5.06 செலவு செய்கிறார்களாம்.(நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் சிறிதளவு பாய்கிறது.ஏதோ பெத்தவங்களை மறக்காம இருந்தா சரின்கறீங்களா?)</p>
<p>62% பேர் கிரிட்டிங் கார்ட் வாங்குவார்களாம். 47% சாக்லேட் வாங்குவார்களாம் 42% வெளிய ஊர் சுத்த போவாங்களாம். 10% கிப்ட் கார்ட்,கிப்ட் தருவார்களாம். 52% ஆண்கள் பூ வாங்குவார்களாம், 15% பெண்கள் பூ வாங்குவாங்க(பொக்கே,பிளவர் பாஸ்கட்ங்க,தலைல வெக்கற பூ கிடையாது) 22.4% நகை வாங்கி கொடுப்பாங்களாம் 5% ஆண்களும்,12% பெண்களும் டிரஸ் கிப்ட் பண்ணுவாங்களாம். 2005 வாலன்டைன் டே தகவல்கள் 18 கோடி ரோஜாக்கள் விற்றன. $2.4 பில்லியன்(ரூ 10,000 கோடி) மதிப்புக்கு நகை விற்றது 18 கோடி கார்டு விற்றது(ரோஜா விற்பனையும் கார்டு விற்பனையும் சமமாக இருக்கு பாத்தீங்களா?) 3.6 கோடி இதய வடிவ சாக்லட் பாக்ஸ் விற்றதாம்.</p>
<p>நாட்டின் நாலாவது பெரிய ஷாப்பிங் திருவிழா காதலர் தினமாம்(கிறிஸ்துமஸ்,ஈஸ்டர்,ஆலோவின் அடுத்தாம்) பூக் கடைக்காரர்களுக்கு அதிக விற்பனையாகும் நாளும் காதலர் தினமாம். தினமும் காதலர் தினமாவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்கிறார்களாம் கடைக்காரர்கள்.அவங்க ஆசைய நிறைவேத்துவோமே?தினம் தினம் காதலர் தினம் கொண்டாடலாம். சண்டை சச்சரவு எதுவும் இருக்காது. எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. என்ன சொல்றீங்க?</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/holyox.wordpress.com/32/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/holyox.wordpress.com/32/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/holyox.wordpress.com/32/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/holyox.wordpress.com/32/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/holyox.wordpress.com/32/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=holyox.wordpress.com&amp;blog=727220&amp;post=32&amp;subd=holyox&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://holyox.wordpress.com/2007/02/23/28%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-12000/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f0b564b11c36ef623155403c75757430?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">Selvan</media:title>
		</media:content>

		<media:content url="http://photos1.blogger.com/blogger/3139/2118/320/images.19.jpg" medium="image" />
	</item>
	</channel>
</rss>
