உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 23, 2007

29.வீரபாண்டிய கவுண்டமணி

Filed under: Comedy, Light reading, Short stories — Selvan @ 4:47 மு.பகல்

வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர்.கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா?

கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை

ஜாக்சன்:”நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?”

கவுண்டர்:”ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா.நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?’

ஜாக்சன்:”ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?’

கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பன்னிக்குட்டி மாதிரி இருக்கே? கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?”

 செந்தில்:”அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க.டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்>”

கவுண்டர் :”அப்படியாடா சொல்றே?”(பயத்துடன் திரும்பி) “நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர்.அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்”

ஜாக்சன்:” நட்பு வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்”

 கவுண்டர்: “இல்லைங்க ஆபீசர்.நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர்.இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?” ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார். ஜாக்சனுக்கு கோபம் வருகிறது.

 ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கவுண்டர்:”என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்”

ஜாக்சன்: “சொன்னால் எண்ணிக்கை தெரியாது.”

கவுண்டர்: (நக்கலாக)”ஓ ஐ ஆம் சாரி.நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்) ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?”

ஜாக்சன்:”எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகம் பிடித்தவனே,சொல்கிறேன் கேள். பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை”

 கவுண்டர்: “வானம் பொழியுது,பூமி விளையுது.நடுவுல வெள்ளைப் பன்னி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்?நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா? என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?”

ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார்.

ஜாக்சன்: “என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்”

கவுண்டர்: “ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ” மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார்.

28.பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி

Filed under: Comedy, Light reading, Short stories — Selvan @ 4:20 மு.பகல்

பாகிஸ்தானில் இந்திய நட்சத்திர கிரிக்கட் அணி சுற்றுப்பயணம் செய்கிறது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விஜய்காந்த் தமது அணி முதலில் பேட் செய்யும் என்கிறார். இரண்டு கதாநாயகர்கள் நடிப்பது தமிழ்திரையுலகில் கிடையாது என்பதால் ஒவ்வொருவராக பேட் செய்வது என முடிவு செய்கிறார்கள்.

முதலில் நெப்போலியன் பேட் செய்ய வருகிறார்.அவரை பார்த்த அக்தர் குழம்புகிறார். “என்னங்க அம்பயர்,இவர் வேட்டி கட்டிட்டு வர்ரார்.பேட் எதுவும் எடுத்துட்டு வராம வெறுங்கையை வீசிட்டு வர்ரார்?” என அம்பயரிடம் கேட்டார் அக்தர்.

“அந்த தம்பி அப்படித்தான்.பவுன்சர் கிவுன்சர் இவருக்கு வீசிப்புடாதே.வில்லங்கமாயிடும்” என அம்பயர் எச்சரிக்கிறார்.

நெப்போலியன் மீசையில் கைவைத்து முறுக்கியபடி விக்கட் அருகே நிற்கிறார்.அக்தர் வேகமாக ஓடிவந்து பந்தை வீச நெப்போலியனின் கை அவரின் சட்டைக்கு பின்னே சென்று 6அடி நீள திருப்பாச்சி அரிவாளை எடுக்கிறது.ஒரே சீவு.பந்து சுக்குநூறாகிறது. “சீவலப்பேரி பாண்டிலே..” என கர்ஜிக்கிறார் நெப்போலியன்.அனைவரும் நடுநடுங்க கம்பீரமாக வீரநடை போட்டு பெவிலியனுக்கு திரும்புகிறார் நெப்போலியன்.

அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கேப்டன் விஜய்காந்த் களமிறங்குகிறார்.அக்தர் இப்போது மிகவும் பயந்து போய் அம்பயரிடம் கேட்கிறார். “ஏனுங்க இவரும் பேட் இல்லாம வர்ராரு.இவர் என்ன பண்ணுவாரு?’ “அதெல்லாம் இப்ப எதுக்கு?ஆனா பவுன்சர் எல்லாம் இவருக்கு போட்டா நீ அதோகதிதான்” என எச்சரிக்கிறார் அம்பயர்.

பயந்து போய் அக்தர் பந்துவீச விஜய்காந்த் அந்தரத்தில் பறந்து பந்தை காலால் உதைக்கிறார்.அம்பயர் எல்.பி.டபிள்யு கொடுக்க விஜய்காந்த் அது தவறு என்று கனல் பறக்க வசனம் பேசுகிறார்.கடைசியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்து அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை என விளக்கவே தன்னை கைதுசெய்ய சொல்லி விஜய்காந்த் கையை நீட்டுகிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன் கெஞ்சி கூத்தாடி அவரை பெவிலியனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ஆரவாரமாக களமிறங்குகிறார்.அக்தர் பயந்துபோய் நிற்க அவரிடம் மெதுவாக சூப்பர்ஸ்டார் முணுமுணுக்கிறார். “அக்தர் கண்ணா,நான் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்.பவுன்சர் ஏதாவது போட்டா சின்ன வயசுல நீ குடிச்ச தாய்ப்பால் வெளியில வந்துடும்”

பயந்து போய் அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர்.

அடுத்து கலைத் தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் களமிறங்குகிறார். அக்தர் வேகமாக பவுன்சர் வீசுகிறார்.சிவாஜியின் நெஞ்சில் அந்த பவுன்சர் பட்டு அவர் கீழே விழுகிறார்.மெதுவாக கண்ணீர் வடித்தபடி எழுகிறார்.

“ஏம்பா கண்ணா அக்தரு..உன்னே சின்ன வயசுல மார்மேலயும் தோள் மேலயும் தூக்கிபோட்டு வளர்த்தேன்.அப்போ நீ என் நெஞ்சுல எட்டி உதைப்பே.அப்போ அது விளையாட்டா இருந்தது.இப்போ நிஜமாவே நெஞ்சுல பவுன்சர் வீசிட்டீயே..”

அம்பயர் முதல் டிவி வர்ணணையாளர்கள் வரை அனைவரும் அழுகின்றனர்.அக்தரும் அழுகிறார்.கண்ணீர் வடித்தபடி சிவாஜி நிற்க தலைவிரி கோலமாக கண்ணாம்பா நுழைகிறார்.

“மனோகரா..என் செல்வனே..எதிரியை வீழ்த்தி புதுக் காவியம் படைக்க நீ புறப்பட்ட போது ஏடுகளை திருடியும் எழுத்தாணியை ஒளித்து வைத்தும் அதை தடுத்தவள் நான் தான். மறக்குலத்தில் பிறந்த வீரப்பெண்மனி நான் என்பது உண்மையானால்,பெண்கள் விடும் கண்ணீருக்கு சக்தி உண்டு என்பது உண்மையானால்,சோழநாட்டு மன்னரின் பத்தினி நான் என்பது உண்மையானால் அக்கிரமக்காரர்களின் சிரிப்பு அடங்கட்டும்.நியாயம் வெல்லட்டும். பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு”

“அம்மா..” என அலறுகிறார் சிவாஜி.

 ”தாயின் ஆணை கிடைத்து விட்டது.புறப்படு..”

கத்தியை எடுத்துக்கொண்டு சிவாஜி புறப்படும் முன் அக்தர்,இன்ஸமாம் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.

26.தெய்வம் தொழா அன் மனைவி தான் தொழுவான்

Filed under: Culture, Religion, Short stories — Selvan @ 4:17 மு.பகல்

சாத்தான் மரத்தின் மீதிருந்து இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.ஏடன் தோட்டமெங்கும் அவன் குரல் இனிமையாக ஒலித்தது.தனிமையில் நடந்து வந்துகொண்டிருந்த ஏவாளின் காதில் அது விழுந்தது. அதுவரை அவள் ஆதமின் குரலையும்,கடவுளின் குரலையும் தவிர வேறு குரலை கேட்டதில்லை.

பாடுவது யார் என்று உற்று நோக்கினாள். மரத்தின் மீது அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது ஒரு பாம்பு என்று தெரிந்ததும் அவள் ஆச்சரியமடைந்தாள். “யார் நீ?” என்று கேட்டாள்.

பாம்பு வடிவில் இருந்த சாத்தான் மெதுவாக கீழிறங்கினான்.”என்னோடு நீ பேசினால் கடவுளுக்கும்,உன் கணவனுக்கும் பிடிக்காது.போய்விடு” என்றான் சாத்தான்.’கடவுள் கருணையே வடிவானவர்.என் கணவர் என் மீது உயிரையே வைத்துள்ளார்.ஆக எனக்கு எந்த பிரச்சனையும் வராது.நீ யார்” என்று கேட்டாள் ஏவாள்.

“என் பெயர் லூசிபெர்.உங்கள் இருவரைபோல் கடவுளின் அன்புக்குரியவனாக முதலில் இருந்தேன்.ஆனால் போகபோக எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது.என் கதையை விடு.அது ஒரு பெருங்கதை” என்று பெருமூச்சு விட்டது சாத்தான்.

ஏவாள் அதிர்ச்சி அடைந்தாள்.கடவுளை கூட ஒருவருக்கு பிடிக்காமல் போகும் என்பதை அவள் அன்று தான் கண்டாள்.ஏன் என்று தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் வந்தது. “ஏன் உனக்கு கடவுளை பிடிக்கவில்லை?” என்று கேட்டாள். “உனக்கு ஏன் கடவுளை பிடித்திருக்கிறது?” என்று திருப்பி கேட்டது சாத்தான். “எங்கள் இருவரை அவர் படைத்தார்.அன்போடு பாதுகாக்கிறார்.அவரை பிடிக்காமல் வேறு யாரை பிடிக்க வேண்டுமாம்?” என்று ஏவாள் கோபமாக கேட்டாள். “ஏன் உன் கணவனை உனக்கு பிடிக்க வேன்டாமா?” என்று திருப்பி கேட்டது சாத்தான்.

“உனக்கு கடவுளை அதிகம் பிடிக்குமா அல்லது உன் கணவனை அதிகம் பிடிக்குமா?’ “கடவுள் எனக்கு தந்தை.ஆனால் ஆதாம் என் கணவன்.எனக்கு ஆதமை தான் முதலில் பிடிக்கும்” என்றாள் ஏவாள். “உன் கணவனுக்கு யாரை முதலில் பிடிக்கும் தெரியுமா? என்று கேட்டது சாத்தான்.

 ’இதில் என்ன சந்தேகம்.என்னை தான் முதலில் பிடிக்கும்” என்றால் ஏவாள்.

“அப்பாவி பெண்ணே..” என்று சிரித்தது சாத்தான்.”நீ ஒரு முட்டாள் ” என்று சொல்லிவிட்டு மறைந்தது.

***

ஏவாள் அழுது கொண்டே இருந்தாள். சாத்தான் சொன்னதை கேட்டு கணவனிடம் சென்று உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு அவன் கடும்கோபம் கொண்டான். கடவுளுக்கு இணையாக உன்னை கருதுகிறாயா என்று சத்தம் போட்டான். அவன் கடும்மொழி பேசி ஏவாள் இதுவரை கேட்டதே இல்லை. பாம்பையாவது பார்க்கலாம் என்று சென்றாள். பாம்பு அதே மரத்தில் உட்கார்ந்திருந்தது.

அவளின் அழுத கண்களை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பது அதற்கு தெரிந்துவிட்டது.”இதில் வருத்தபட ஒன்றும் இல்லை” என்றது பாம்பு.”கடவுளுக்கு அடுத்துதான் அவன் உன்னை தான் விரும்புவான்.கடவுள் மேல் பக்தி கொண்ட அனைவரும் அப்படிதான் இருப்பார்கள்” என்றது பாம்பு.

“பெண்ணின் மனம் உனக்கு தெரியாது என்றாள் ஏவாள்.”என்ன தான் கடவுளே ஆனாலும் என் கணவனுக்கு என்னை தான் முதலில் பிடிக்க வேண்டும்.அந்த உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.ஆனால் இவன் இப்படி இருக்கிறான்.எனக்கு இது பிடிக்க வில்லை” என்றாள் ஏவாள். “அவன் அப்படி தான் சொல்வான்.ஆனால் மனதில் உன்மேல் அவனுக்கு பிரியம் இருக்கும்.நீயா கடவுளா என்று வந்தால் அவன் உன்னை தான் தேர்ந்தெடுப்பான்” என்றது சாத்தான்.

“எப்படி நம்புவது” என்று கேட்டாள் ஏவாள். ‘பரிசோதித்து பார்க்க வேண்டியது தான்” என்று சொல்லி சிரித்தது சாத்தான்.”

ஆனால் அப்படி செய்தால் இந்த இனிமையான வாழ்வு மறைந்து விடும்.துன்பம் உன் வாழ்வில் நுழையும்”

“நுழையட்டும்” என்றாள் ஏவாள்.”என்ன கஷ்டப்பட்டாலும் என் கணவன் எனக்கே சொந்தமாக இருப்பானல்லவா?அவன் என் மேல் உண்மையான் காதல் கொண்டிருக்கிறானா இல்லை அவன் தந்தையை தான் அவனுக்கு பிடிக்குமா என்று சோதித்து பார்த்துவிடுகிறேன்.இதனால் என்ன விளைவுகள் வந்தாலும் பரவாய்ல்லை” என்றாள் ஏவாள்.

****

“என்ன காரியம் செய்துவிட்டாய்” என்று பதறினான் ஆதாம்.”ஐயோ நீ அந்த பழத்தை சாப்பிட்டது தந்தைக்கு தெரிந்தால் உன்னை அழித்துவிடுவாரே.” என்று கலங்கினான்.

“நான் செத்தால் உனக்கென்ன” என்றாள் ஏவாள்.”உன் இன்னொரு விலா எலும்பின் மூலம் இன்னொரு பெண்ணை உருவாக்குவார் உன் தந்தை.அவளோடு குடும்பம் நடத்து” என்றாள் ஏவாள்.

“முட்டாளே” என்று அழுதான் ஆதாம்.”உன்னை விட்டால் எனக்கு வாழ்வு இல்லை.நீ இல்லாமல் இந்த ஏடன் தோட்டத்தில் நான் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறேன்.?” தந்தை வரும் நேரம் நெருங்கியது.ஆதாம் அந்த ஆப்பிளின் மிச்சத்தை எடுத்தான். சாப்பிட போனான்.

 ”வேண்டாம்” என்று பதறினாள் ஏவாள். “உன் காதலை நான் உணர்ந்து கொண்டேன்,இனி மகிழ்ச்சியோடு சாகிறேன்” என்றாள்.

“முட்டாள் பெண்ணே” என்றான் ஆதம்.”வாழ்வோ சாவோ அது உன்னோடு தான்.உனக்கு என்ன நடக்கிறதோ அதை நானும் அனுபவிக்கிறேன்” என்றான். ஆப்பிளை கடித்தான். பெண்ணின் முதல் புரட்சி வென்றது. காதல் சிம்மாசனமேறியது.

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.