உலகின் புதிய கடவுள்

ஜனவரி 28, 2007

8.கொலை செய்யும் குரங்கினம்

Filed under: Culture, Science — Selvan @ 2:31 பிற்பகல்

கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவை ஏன் நிகழ்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். மானுட வன்முறையின் காரணம் என்ன என்பதை கண்டறிய டார்வின் கோட்பாடு பெருமளவு உதவி புரிந்தது. இது பற்றிய சுவையான ஒரு ஆய்வு முடிவை இடுகிறேன்.

சிங்கம்,புலி உட்பட பல மிருகங்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதுண்டு. ஆனால் அவை தம்மினத்தவரை படுகொலை புரிவதில்லை. ஒரு பெண்சிங்கத்துக்காக இரு ஆண்சிங்கங்கள் சண்டையிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆண்சிங்கம் தோற்றுப்போனால் சண்டை அதோடு முடிந்துவிடும். வென்ற சிங்கம் தோற்ற சிங்கத்தை ஏதும் செய்யாது. ஆனால் குரங்கினத்தில் அப்படி அல்ல (இங்கு குரங்கு என்று சொல்வது ஏப் இனத்தை.குரங்கினம் என்பது மனிதனையும் சேர்த்துதான்).

குரங்கினங்களில் மற்ற வகை மிருகங்களிடையே காணப்படாத பல குணாதிசயங்கள் உண்டு. படை திரட்டி தம்மினத்தவரிடையே போர் புரிவது, அரசியல் புரிந்து பதவியை கைப்பற்றுவது, கற்பழிப்பது, குழு வன்முறையில் ஈடுபடுதல், குழு கற்பழிப்பில் ஈடுபடுதல், ஆயுதங்கள் பயன்படுத்துவது போன்ற குணாதிசயங்கள் குரங்கினத்துக்கு மட்டுமே சொந்தம்.

இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்தபோது பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இதையும் தூக்கி அடிக்கும் விதமாக குரங்கினத்தில் விபச்சாரம் நடைபெறுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பு ஏற்பட்டது.

ஆனால் பிறகு நடந்த பல ஆய்வு முடிவுகள் இதை உறுதிபடுத்தின.(பழத்துக்காகவும், மாமிசத்துக்காகவும் பெண் ஏப்கள் விபச்சாரத்தில் ஈடுபடும்.) இந்த ஆய்வுமுடிவுகள் ஆந்தரபாலஜி எனப்படும் மானுடவியல் துறையில் பல புதிர்களை விடுவிக்க உதவின. மானுட வன்முறையின் மூலத்தை அறிய இவை உதவின.

1974′ல் டான்சானியாவில் கோம்பே வனப்பகுதியில் குரங்கு வன்முறையை குட் ஆல்(பார்க்க புகைப்படம்) என்ற பெண் ஆய்வாளர் முதன்முறையாக பதிவுசெய்தார். உயிரியல் துறையை திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஆய்வு இதோ.

ஏப்கள் மனிதனை போல் சமுதாயமாக தான் வாழும்.ஒரு ஏப் சமுதாயத்துக்கும் இன்னொரு ஏப் சமுதாயத்துக்கும் இடையே அடிக்கடி போர் ஏற்படுவதுண்டு. கொரில்லா தாக்குதல் என்று சொல்லப்படும் தாக்குதல்களை செய்வதில் ஏப்கள் புகழ்பெற்றவை. உளவு பார்த்தல், ரகசிய தாக்குதல்கள் போன்றவையும் ஏப்களிடையே உண்டு.

 குட் ஆல் கண்காணித்துக் கொண்டிருந்த ஏப் குடியிருப்பில் இருந்து 7 ஏப்கள் இரவு ரகசியமாக கிளம்பின. 6 ஆண்கள்,1 பெண்.குட் ஆல் அவற்றை பின் தொடர்ந்தார். அந்த பெண் ஏப்புக்கு குட் ஆல், கிகி என்று பெயர் வைத்திருந்தார். கிகி குழந்தை பாக்கியம் இல்லாத கோபக்கார ஏப்பாகும். மிக ரகசியமாக பதுங்கி பதுங்கி இந்த 7 ஏப்களும் எதிரியின் காட்டு பகுதிக்குள் நுழைந்தன. ஒருவருக்கொருவர் சைகை செய்துகொள்வதும் சப்தம் எழுப்பாமல் செல்வதுமாக யுத்த தந்திரங்களை அவை லாவகமாக கையாண்டன. எதிரி குடியுருப்பில் இருந்த ஒரு சிம்பன்ஸி(கோடி என்று பெயர்) தனியாக ஒரு மரத்தில் ஏறி பழம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது.

கோடி 21 வயது நிரம்பிய வலுவான சிம்பன்ஸியாகும். கிகி மெதுவாக சப்தமெழுப்பாமல் மரத்தின் மீதேறி கோடியை அடித்து கீழெ தள்ளியது. கீழே விழுந்த அதிர்ச்சியில் கோடி தள்ளாடியபோது அம்ப்ரி என்ற சிம்பன்ஸி அதன் காலை பிடித்தது. இரண்டு காலையும் ஒரு மல்யுத்த வீரன் போல் அம்ப்ரி பிடித்துக்கொள்ள மற்ற சிம்பன்ஸிக்கள் தாக்குதலை தொடங்கின. குழுவாக சேர்ந்து அடி, உதை, குத்து, கடி, முகத்தின் மீது மிதித்தல், மர்மஸ்தானத்தில் குறிபார்த்து தாக்குதல் என்று அனைத்தும் நடந்தன. (ஒரு சிம்பன்ஸியின் எடை சுமார் 50 கிலோ)

கிகி சுற்றிவந்து வெறிக்கூச்சலிட்டபடி நடனமாடியது. கன்னியொருத்தி உற்சாகப்ப்டுத்தினால் ஆண் ஏப்களுக்கு கேட்கவும் வேண்டுமோ. அடி மேலும் வலுத்தது. பாவம் கோடி. 10 நிமிட தாக்குதலுக்கு பிறகு கோடி மயங்கி சரிந்தது. கூட்டம் தாக்குதலை நிறுத்தியது.அடுத்து என்ன செய்யவேண்டும் என ஆலோசித்தது. இறுதியாக 2 சிம்பன்ஸிக்கள் ஒரு பெரிய கல்லை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்து சரியாக கோடியின் தலைமீது போட்டன. கதை முடிந்தது.  7 சிம்பன்ஸிக்களும் வெற்றிகரமாக தமது குடியிருப்புக்கு திரும்பியதாக குட் ஆல் எழுதுகிறார்.எதிரியின் படையில் இருந்த ஒரு வலுவான ஆள் காலி.

குட் ஆலின் இந்த ஆய்வு முடிவு உயிரியல் துறையை திரும்பி பார்க்க வைத்த ஆய்வாகும்.ஏப்களிடையே போர் தந்திரமும்,குழு வன்முறையும் உண்டு என்பதை அன்று தான் அறிவியல் உலகம் அறிந்தது. ஜேன் குட் ஆல் பற்றிய விக்கிபீடியா பதிவு இதோ http://en.wikipedia.org/wiki/Jane_Goodall

7.குமரிக்கண்ட வரலாறு

Filed under: Culture, Religion, Science — Selvan @ 2:25 பிற்பகல்

லெமூரிய தேடலின் வரலாறு: லெமூரியா என்ற சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் பிலிப் லட்லி ஸ்காட்லர் (1864) என்ற வெள்ளையராவார். லேமூரியாவை கோன்ட்வானாலாந்து,இந்தோ-ஆப்பிரிக்க கண்டம் என்று பல பெயரால் 19ம் நூற்றாண்டின் ஐரொப்பிய ஆராச்சியாளர்கள் அழைத்தனர். லெமூரியா என்பது கண்டமா என்று பலத்த விவாதம் நடைபெற்றது. அது ஒரு பாலம் என்று வாதிட்டவர் உண்டு.கண்டம் என்று வாதிட்டவர் உண்டு. நிலப்பாலம் என்று கூறியவர் உண்டு.

அன்றைய தமிழறிகர்கள் தமிழ் பெயரை லெமூரியக்கண்டதுக்கு இட்டனர்.சூரியநாராயன சாஸ்திரியார் 1903′ல் ‘குமரி கண்டம்” என அதை அழைத்தார்.’குமரி நாடு’ ‘குமரி தேசம்’ என்று பல பெயர்கள் லெமூரியாவுக்கு அன்று இடப்பட்டன. லெமூரியா என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டால் தமிழர் கொதித்துபோவோம். பிலிப் ஸ்காட்லர் ஒரு விலங்கியல் துறை நிபுணர். லெமூரியகண்டத்தில் லெமூர் என்ற குரங்கினம் வாழ்ந்ததாக கருதி அப்பெயரை அவர் இட்டார்.அன்றைய தமிழறிஙர்களுக்கு அப்பெயர் பிடிக்காதது போனதற்கு இது தான் காரணம்.

பெரும்பாலான தமிழ் பெயர்கள் ‘குமரி’ என்றே துவஙி இடப்பட்டன. லெமூரிய கண்டத்து தமிழர்களை பற்றி அன்றைய ஐரோப்பியரிடையே பல கீழான கருத்துக்கள் நிலவின. அவர்கள் குரங்கு மனிதர்கள், நியாண்டர்தால்கள் என்று ஐரோப்பியர் கருதினர்.

யாழ்பாணத்தை சேர்ந்த தமிழறிங்கர் முத்தாம்பி பிள்ளை 1902′லேயே இந்த கருத்தை மறுத்தார்.லெமூரியா என்ற பெயரயே ஒதுக்கிவிட்டு குமரி நாடு என்று அதற்கு பெயர் சூட்டினார்.

சமஸ்கிருத புராணங்களில் லெமூரியா:

வடமொழி புரானங்களில் லெமூரியா “குமாரிகா கண்டம்” என்று அழைக்கபட்டது. குமரித்திவீபம் என்றும் சொன்னார்கள். பாரத வர்ஷம் என்று இந்தியா 9 பிரிவுகளாக ஸ்கந்தபுரானத்தில் பிரிக்கபட்டுள்ளது. அதில் குமரித்தீவிபம் பற்றி சொல்லிவிட்டு பாரதநாட்டில் நாகரிக மனிதர்கள் வாழ்ந்த ஒரே பிரதேசம் குமரித்திவீபம் தான் என்று சொலியிருப்பதாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.

சிவன்கோயில்களும்,சைவத்தலங்களும்,பிராமண குடியிருப்புகளும் லெமூரியாவில் நிரம்பியிருந்ததாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.(“கந்த புராண வசனம்” 1981-கொழும்பு-வெளியீடு ஆறுமுகநாவலனார் சபை)

5.குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

Filed under: Culture, Science — Selvan @ 2:17 பிற்பகல்

  டார்வின் 1871′ல் The Descent of Man and selection in relation to sex என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அன்றைய விஞ்ஞானிகள் மனிதன் ஒரு குரங்கு என்பதை ஒத்துக்கொள்ள மறுத்ததை கடுமையாக சாடினார்.அன்றைய விஞ்ஞானிகள் மனிதனை பிமானா என்ற ஒரு இனமாக,குரங்கிலிருந்து வித்யாசமானவனாக கருதினர்.

இப்படி மனிதனை ஒரு தனி இனமாக பிரிப்பதையே டார்வின் வேடிக்கையாக நினைத்தார்.”மனிதன் தன்னை தானே பாகுபடுத்துவதால் தான் தன்னை ஒரு தனி இனமாக நினைக்கிறான்” என்று அவர் எழுதினார். டார்வினின் கருத்துக்களுக்கு ஆதரவு வேகமாக பரவியது.1863′ல் தீவிர கிறிஸ்துவரான டக்ஸ்லி ஏப்பையும் மனிதனையும் பாயின்ட் பை பாயின்டாக ஒப்பீடு செய்தார்.டார்வினின் அனைத்து கருத்துக்களும் உண்மை என்பதை அவர் கண்டார். டக்ஸ்லி அடுத்து மனித்னையும் கொரில்லாக்களையும் ஒப்பீடு செய்தார்.ஒப்பீட்டின் அடிப்படையில் கொரில்லாக்களும் மனிதனும் வெகு நெருக்கமானவர்கள் என்று கண்டார்.கொரில்லாக்கள் வேறு எந்த வகை குரங்குகளையும் ஏப்களையும் விட மனிதனுக்கு நெருக்கமானவை என்று அவர் கண்டார்.

மனிதன்,கொரில்லா,போனபோ,உராங்க் உடான்,சிம்பன்ஸி,குரங்கு ஆகிய குரங்குகள் அனைத்தும் ஓரினம் தான்.இவை அனைத்துக்கும் ஒரே மூதாதைதான்.25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கார் இந்த இனத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போய்விட்டார். 2 – 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குரங்கு இனத்தில் இருந்து பிரிந்து போய்விட்டான். மனிதனை இப்படி கொரில்லா,போனபோ,உராங்குடான் வகை குரங்குகளில் சேர்த்தபிறகும் சர்ச்சைகள் ஓயவில்லை.

டார்வினின் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரம் 1905′ல் ஜார்ஜ் நடால் மூலம் கிடைத்தது. நட்டாலின் ஆய்வு முறை மிகவும் எளிதானது.முயல்களை எடுத்துகொண்டு அவற்றின் உடலில் மனித ரத்தத்தை செலுத்தினார்.மனித ரத்தத்தை முயல் ரத்தம் ஏற்றுக்கொள்ளாது.மனித ரத்தத்தை ஒரு வெளிநாட்டு படையெடுப்பாளர் போல் முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் கருதும்(Immune system). உடனடியாக சீரத்தையும்(serum),ஆனிடிபயாட்டிக்குகளையும் (anti biotics) முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி செய்யும்.

அந்த முயல் ரத்தத்தை நட்டால் சுத்தம் செய்து சீரத்தை எடுத்தார்.அந்த சீரம் மனித எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக்குகளை(anti human serum) கொண்டிருந்தது.இதே போல் முயல் உடம்பில் இருந்து சிம்பன்ஸி எதிர்ப்பு சீரம் (anti chimp serum),உராங் உடான் எதிர்ப்பு சீரம்,எலி எதிர்ப்பு சீரம், குதிரை எதிர்ப்பு சீரம் போன்ற பல மிருகங்களின் எதிர்ப்பு சீரங்களை அவர் எடுத்தார். அடுத்ததாக மனித ரத்தத்தை எடுத்து எலி எதிர்ப்பு சீரத்தில் கலந்தார்.உடனடியாக நுரை லேசாக பொங்கியது.மனித ரதத்தை மனித எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் நுரை பொங்கி பிரிஸிபிடேட் உண்டானது.மனித எதிர்ப்பு சீரம் மனித ரத்ததை அவ்வளவு கடுமையாக எதிர்த்தது. மனித ரத்தத்தை குரங்கு எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் அதை விட குறைவாக எதிர்ப்பு பதிவானது.ஆனால் ஏப் எதிர்ப்பு சீரத்தில் மனித ரத்தத்தை கலந்ததும் மிக கடுமையான எதிர்ப்பு வந்தது.

மனித ரத்தத்தை மனித எதிர்ப்பு சீரம் எந்த அளவு எதிர்க்குமோ அதே அளவு எதிர்ப்பு ஏப் எதிர்ப்பு சீரமும் காண்பித்தது.மனிதன் ஏப் இனம் என்பதை அறிவியல் பூர்வமாக நார்ஜ் நடாலின் இந்த புகழ் பெற்ற ஆய்வு காட்டியது.அதன் பிறகு டார்வினின் கோட்பாடு உலகெங்கும் ஏற்கப்பட்டது.

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.