உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 1, 2007

21.உலகசாதனை படைத்த ஆஞ்சனேயர்

Filed under: Culture, India, Light reading, Religion — Selvan @ 8:45 பிற்பகல்

1970′ல் பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் விளையாட்டாக அந்த முயற்சி துவங்கப்பட்டது.இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலையை நிறுவுவதுதான் அவர்கள் நோக்கம். 20,000 ரூபாய் செலவில் மலையுச்சியில் சிலையை நிறுவினார்கள். 1976′ல் உடுப்பி,சிருங்கேரி சங்கராச்சாரியர் முன்னிலையில் பிரசன்ன வீராஞ்சனேய ஸ்வாமி சிலை நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலை அதுதான் என்று சொல்லப்பட்டது.

சரியாக 6 வருடங்கள் தான் அந்த சாதனை நீடித்தது.1982′ல் இமாச்சல் பிரதேசத்தில் சின்மயானந்த ஸ்வாமிகள் அந்த சாதனையை முறியடித்து விட்டார்.30 அடி உயரத்தில் சின்மயரின் ஆஞ்சனேயர் பெங்களூர் ஆஞ்சனேயரை தோற்கடித்து விட்டார்.அதுவும் இமயமலை உச்சியில் தவக்கோல ஆஞ்சனேயரை ஸ்தாபித்து விட்டார் சின்மயானந்தர். 1987′ல் அந்த சிலை பூர்த்தியடைந்தது. கோலாகலமாக விழா எடுத்து சின்மயர் பக்தர்கள் அதை கொண்டாடினர்.  டில்லிக்காரர்கள் சும்மா விடுவார்களா? 1989ல் டில்லி பாலம் ரோட்டில் இந்தியாவிலேயே உயரமான சிலை நிறுவ திட்டம் போட்டனர்.இதற்கு ஐடியா கொடுத்தவர் ப்ரபுதத் ப்ரம்மச்சாரி எனும் முனிவர். தில்லியில் அனுமன் சிலை இல்லாததுதான் தில்லி அன்னிய படையெடுப்புக்கு ஆளாக காரணம் என்று அவர் சொன்னதும் பணம் நாலாபக்கமும் இருந்து குவிந்தது.

1300 டன் எடை கொண்ட 45 அடி கருங்கல் ஆஞ்சனேயர் மங்களூரில் இருந்து வரவழைக்கபட்டார். 1990′ல் அது டில்லி பாலம் ரோட்டில் நிறுவப்பட்டது. இனி டில்லி மீது யாரும் படைஎடுக்க முடியாது என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் ப்ரபுதத் பிரம்மச்சாரி. ஆஞ்சனேயன் காவலிருக்கும் நகரை யாராவது தொட முடியுமா என்ன?

அதே வருடம் பிரம்மச்சாரியின் சாதனை முறியடிக்கப்பட்டது,1990′ல் சத்யசாய்பாபாவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு 65 அடியில் கான்கிரீட் ஆஞ்சனேயர் சிலை நிறுவப்பட்டது.சஞ்சீவி மலையை கையில் ஏந்திய ஆஞ்சனேயர் அந்த விழாவுக்காக நிறுவப்பட்டார். ஆனால் கான்கிரிட் சிலை என்பதால் அது உலக சாதனையாகாது என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவில் உள்ள 85 அடி ஆஞ்சநேயர் சிலை தான் உலகிலேயே உயரமானது என்கிறார்கள்.(பார்க்க படம்)

 தமிழ்நாடு மட்டும் சளைத்ததா என்ன?உலக சாதனை செய்யவில்லை என்றாலும் விழுப்புரத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடி உயரத்தில் இருக்கிறார்.சரி,நம்ம நாமக்கல்,சுசீந்திரம் ஆஞ்சனேயர் சிலை எல்லாம் எவ்வளவு உயரம்?தெரிஞ்சவங்க சொல்லுங்க.

ஜனவரி 28, 2007

18.இந்தியனாக இரு இந்தி திணிப்பை மறு

Filed under: Culture, India, Politics — Selvan @ 3:01 பிற்பகல்

என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன். ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான். எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் “தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டான். “தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?” என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன். என் நாட்டுப்பற்றை அளக்க இந்தி பேசுவதுதான் அளவுகோலா?

பல இடங்களில் இதுபோல் நடந்திருக்கிறது. இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள். ‘இந்தி தெரியாது’ என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்காவில் இருந்துகொண்டு பட்லர் இங்கீஷை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகிறவர்கள் பலர்.

பள்ளியில் சிறுவயதில் என் அப்பா என்னை இந்தி வகுப்பில் சேர்த்தார். கடுங்கோபம் கொண்ட என் அம்மா என் பள்ளி ஆசிரியரிடம் சண்டை பிடித்து என்னை தமிழ் வகுப்பில் சேர்த்தார்கள்.தமிழ் படிக்க தெரிந்தால் தான் நான் திருப்பாவை,நாலாயிர பிரபந்தம் படிப்பேன் என்பது அவர்கள் வாதம்.”இந்தி படிக்காத இவன் உருப்பட மாட்டான்” என்று என் அப்பா சாபம் கொடுத்தார்.(இப்போதும் என்னை உருப்பட்டவன் என்று அவர் ஒத்துக்கொள்வதில்லை என்பது வேறு விஷயம்)

இந்தி படிக்க வேண்டுமென்போர் தாராளமாக பள்ளியில் விருப்பபாடமாக படித்துக் கொள்ளலாம். நான் அதை ஆதரிக்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி மாணவர்கள் மேல் இந்தியை திணிப்பதை நான் வெறுக்கிறேன்.எதிர்க்கிறேன்.

ஆமை புகுந்த வீடும், இந்தி புகுந்த மாநிலமும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை. இந்தி புகுந்ததால் மராத்தி, குஜராத்தி, பன்சாபி, ராஜஸ்தானி, போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது. கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.

இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம். தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்? பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம். ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா?

இந்தி விஷயத்தில் திமுக, அதிமுகவின் பின் வரும் கருத்துக்களை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

 1.தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக கூடாது.விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கலாம்.

2.இந்தியை கட்டயாமாக சொல்லிதருவதால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க எம்.ஜி.ஆர் அரசு மறுத்துவிட்டது. அது மிக சரியான முடிவு.இந்தியை கட்டாயப் பாடமாக இருப்பதை ரத்து செய்துவிட்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க வேண்டும்.

3.அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.

4.மறைமுகமாக இந்தியை திணிக்கும் வேலைகள் கூடாது.

தில்லியில் நினைத்து நினைத்து தேசிய மொழியை மாற்றுவார்கள். எத்தனை தேசிய மொழிகளை தமிழன் கற்பது? இப்போது இந்தி,60 வருடம் முன்பு ஆங்கிலம்,அதற்கு முன் உருது, அதற்கு முன் பாரசீக மொழி, அதற்கு முன் சமஸ்கிருதம் என 500 ஆண்டுகளுக்கு ஒரு தேசிய மொழியை இவர்கள் வைத்திருப்பார்கள். இதை எல்லாம் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமா?

 இதுபோக ஒரு விண்ணப்பம். வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.

6.இந்தியாவை கைதூக்கி விடும் அமெரிக்கா

Filed under: Economy, India, Politics — Selvan @ 2:20 பிற்பகல்

அமெரிக்கா இந்தியாவின் எதிரி என சொல்லுவோர் கவனத்துக்கு

சென்ற வருடம் அவுட்சோர்சிங்கால் கிடைத்த வேலைகள் 13 லட்சம்

சென்ற வருட H1B விசாக்கள் 65,000

சென்ற வருட படிப்பு விசாக்கள் 80466

ஆரகிள் கம்பனி மட்டும் அதிகரித்த இந்திய பணியிடங்கள் 10000

இந்தியாவில் ஐ,பி.எம் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10,000 , கெவ்லெட்ட் பக்கார்ட் 10,800,  மைக்ரோசாப்ட் 3000 , டி.ஜி.எஸ் 4400 (இவை அத்தனையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேர்கள்,ஆக அமெரிக்காக்காரன் இந்தியாவில் பொருளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு விற்கிறான்.சம்பளம் இந்தியனுக்கு)

வருஷா வருஷம் அதிகரிக்கும் சாப்ட்வேர் வேலைகள் 68,000

2008இல் சாப்ட்வேர் கம்பனிகளில் வேலை பார்ப்போர் எண்ணிக்கை பற்றிய நாஸ்காமின் மதிப்பீடு 22 லட்சம்

 இந்திய கம்பனிகளுக்கு கிடைத்த அவுட்சோர்சிங் விற்றுமுதல் 22 பில்லியன் டாலர்(அதிகமில்லை ஜென்டில்மென் 94,600 கோடி ரூபாய் தான்)

அமெரிக்கவுக்கு ஏற்றுமதியான இந்திய பொருட்கள் 15 பில்லியன் டாலர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது 6.1 பில்லியன் டாலர்.

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.