உலகின் புதிய கடவுள்

ஜனவரி 28, 2007

18.இந்தியனாக இரு இந்தி திணிப்பை மறு

Filed under: Culture, India, Politics — Selvan @ 3:01 பிற்பகல்

என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன். ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான். எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் “தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டான். “தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?” என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன். என் நாட்டுப்பற்றை அளக்க இந்தி பேசுவதுதான் அளவுகோலா?

பல இடங்களில் இதுபோல் நடந்திருக்கிறது. இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள். ‘இந்தி தெரியாது’ என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்காவில் இருந்துகொண்டு பட்லர் இங்கீஷை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகிறவர்கள் பலர்.

பள்ளியில் சிறுவயதில் என் அப்பா என்னை இந்தி வகுப்பில் சேர்த்தார். கடுங்கோபம் கொண்ட என் அம்மா என் பள்ளி ஆசிரியரிடம் சண்டை பிடித்து என்னை தமிழ் வகுப்பில் சேர்த்தார்கள்.தமிழ் படிக்க தெரிந்தால் தான் நான் திருப்பாவை,நாலாயிர பிரபந்தம் படிப்பேன் என்பது அவர்கள் வாதம்.”இந்தி படிக்காத இவன் உருப்பட மாட்டான்” என்று என் அப்பா சாபம் கொடுத்தார்.(இப்போதும் என்னை உருப்பட்டவன் என்று அவர் ஒத்துக்கொள்வதில்லை என்பது வேறு விஷயம்)

இந்தி படிக்க வேண்டுமென்போர் தாராளமாக பள்ளியில் விருப்பபாடமாக படித்துக் கொள்ளலாம். நான் அதை ஆதரிக்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி மாணவர்கள் மேல் இந்தியை திணிப்பதை நான் வெறுக்கிறேன்.எதிர்க்கிறேன்.

ஆமை புகுந்த வீடும், இந்தி புகுந்த மாநிலமும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை. இந்தி புகுந்ததால் மராத்தி, குஜராத்தி, பன்சாபி, ராஜஸ்தானி, போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது. கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.

இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம். தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்? பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம். ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா?

இந்தி விஷயத்தில் திமுக, அதிமுகவின் பின் வரும் கருத்துக்களை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

 1.தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக கூடாது.விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கலாம்.

2.இந்தியை கட்டயாமாக சொல்லிதருவதால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க எம்.ஜி.ஆர் அரசு மறுத்துவிட்டது. அது மிக சரியான முடிவு.இந்தியை கட்டாயப் பாடமாக இருப்பதை ரத்து செய்துவிட்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க வேண்டும்.

3.அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.

4.மறைமுகமாக இந்தியை திணிக்கும் வேலைகள் கூடாது.

தில்லியில் நினைத்து நினைத்து தேசிய மொழியை மாற்றுவார்கள். எத்தனை தேசிய மொழிகளை தமிழன் கற்பது? இப்போது இந்தி,60 வருடம் முன்பு ஆங்கிலம்,அதற்கு முன் உருது, அதற்கு முன் பாரசீக மொழி, அதற்கு முன் சமஸ்கிருதம் என 500 ஆண்டுகளுக்கு ஒரு தேசிய மொழியை இவர்கள் வைத்திருப்பார்கள். இதை எல்லாம் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமா?

 இதுபோக ஒரு விண்ணப்பம். வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.

16.ராமாயணம் படிக்கும் அபு சலேம்

Filed under: Culture, Politics, Religion — Selvan @ 2:58 பிற்பகல்

சிறையில் இருக்கும் தீவிரவாதி அபுசலேம் ராமாயணம் படிக்க துவங்கிவிட்டான்.அவனது வக்கீல் அசோக் சரோகியிடம் ராமாயணம் மற்றும் திருக்குரான் புத்தகங்களை வாங்கித்தர சொல்லியிருக்கிறான்.

அவரும் வாங்கிக்கொண்டு ஜனவரி 29ம் தேதி அவனை பார்க்க சிறைக்கு போயிருக்கிறார். போனபோது அபுசலேம் தியானத்தில் ஈடுபட்டு “ஓம்” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தானாம்.

ராமாயணத்தின் மீது திடீர் பற்று ஏன் என்று கேட்டதற்கு “வால்மிகி முனிவர் திருடனாய் இருந்து மனம் மாறியதுபோல் தானும் மனம் மாற விரும்புவதாக” சொல்லியிருக்கிறான். அவன் வக்கீல் சரோகி, அபுசலேம் தன் பாவங்களை போக்கிக் கொள்ள வால்மீகியின் அனுபவத்தை முன்னுதாரணமாக கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார். மாதாஜி மோனிகா பேடியுடன் சேர்ந்து ஆசிரமம் எதாவது அமைக்க ஐடியாவோ என்னவோ?சொல்ல முடியாது.கலிகாலம்.என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். http://www.hindu.com/thehindu/holnus/002200601291258.htm

15.”நான் ஏன் பிறந்தேன்?”–குரங்கு கேள்வி

Filed under: Culture, Philosophy, reviews, Short stories — Selvan @ 2:56 பிற்பகல்

டக்ள்ஸ் ஆதாம் ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதினார்.அதில் மனிதர்கள் இறுதி விடையை கன்டுபிடிக்க ஒரு அதி அற்புத க்ம்ப்யூட்டரை தயார் செய்கிறார்கள். கோடிகணக்கான டாலர் செலவில் செய்யபட்ட அந்த அறிவியல் அற்புதத்திடம் “வாழ்வின்,ப்ரபஞ்ஜத்தின் மற்றும் அனைத்துக்குமான இறுதி விடையை கண்டுபிடிக்க சொல்கிறார்கள்.

இது என்ன சாதாரணமாக நடக்கக்கூடியதா?ஆனால் அந்த கணிப்பொறியும் சாதாரணமானது அல்ல. அது விடையை தேட தொடங்கியது. இது வரை எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ,என்ன என்ன பதிவு நடந்ததோ அத்தனயயும் ஆய்வு செய்தது.வருடஙகள் உருன்டோடின, நூற்றாண்டுகள் கடந்தன. மனித இனம் பொறுமையாக காத்திருந்தது. கம்ப்யூட்டரை இயக்க கோடி கோடியாய் பணம் செலவானது. நூற்றான்டுகள் ஆயிரம் ஆண்டுகளாகின,லட்சம் ஆண்டுகளாகின. இறுதியில் 70 லட்ச்சம் ஆண்டுகளுக்கு பிறகு பதில் வரப்போகும் தேதி வந்தது. மனித இனம் ஆவலோடு கூடி நின்றது.

இறுதி பதில் வந்தது

“42″.

அவ்வளவு தான்.வேறு ஒன்றும் கம்ப்யுட்டர் சொல்லவில்லை.

“42ஆ?அப்படி என்றால் என்ன?” என்று கூவினார் ஆராயிச்சியாளர்.

“இறுதி விடை” என்று பதில் அளித்தது கம்ப்யூட்டர்.

அனைவரும் தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்துவிட்டனர். 42 என்பதை வைத்துகொன்டு என்ன செய்வது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அது தான் இறுதி விடை என்று கம்ப்யூட்டர் சத்தியம் செய்தது. மெதுவாக ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“ஆமாம் ,வாழ்வின் இறுதி விடை,இறுதி விடை என்றீர்களே,அதற்கான கேள்வி என்ன” என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. கம்ப்யுட்டருக்கும் தெரியவில்லை. பதில் கையில் உள்ளது. ஆனால் கேள்வி என்ன?

இம்மாதிரி நிறைய 42கள் உலகில் உள்ளன.காந்தி பக்தர்கள் சொல்லும் 42 அகிம்சை என்பதாகும். சாமி பக்தர்கள் சொல்லும் 42 அவர்கள் புனித நூலாகும். உலகில் உள்ள எல்லாக் கேள்விக்கும் பதில் அந்த புனித நூலில் உள்ளது என்று அவர்கள் சத்தியமே செய்வார்கள்.

“இதெல்லாம் பொய். உண்மையான பதில் மார்க்ஸ் தந்த டாஸ் காப்பிடலில் இருக்கிறது” என்று கம்ம்யூனிஸ்டுகள் சத்தியம் செய்வார்கள். உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில் டாஸ்காப்பிடலில் இருக்கிறதாம். அது அவர்கள் தரும் 42. 

இம்மாதிரி 42களை கண்டு நீட்ச்சே சிரித்தார். உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பும் ஐடியாவே அவருக்கு பிடிக்கவில்லை. அப்படி எந்த உண்மையும் நாம் கண்டுபிடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கவில்லை என்று சொன்னார்.

காட்டில் இருக்கும் குரங்கு “நான் ஏன் பிறந்தேன்?” என்று கேள்வி எழுப்பிக்கொண்டு உண்மையை கண்டுபிடிக்கிறேன் என கிளம்பினால் அது கண்டுணரப்போகும் பதில் யாது?

“நான் யார்?” என்று குரங்கு கேட்டால் “நீ குரங்கு” என்பது தான் பதில்.”குரங்கு 2000 வருடம் சிந்தித்தாலும் பதில் இதுதான்.”நான் ஏன் பிறந்தேன்?” என்று குரங்கு கேட்டால் “பழம் தின்ன பிறந்தாய்” என்பது தான் பதில். “குரங்குலகை உய்விக்க பிறந்தாய்” என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். “42″ என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி கேள்விகளுக்கு கிடைக்கும் எந்த பதிலும் தவறானவைதான். குரங்கினமான மனிதனும் இம்மாதிரி கேள்விகளை கேட்டுக்கொண்டு திரிந்தால் இது தான் பதில். குரங்கு ஏன் பிறந்தது?அது எதை சாதிக்கவும் பிறக்கவில்லை. அது சும்மா பிறந்தது. குரங்கினத்தை சேர்ந்த மனிதன் எனும் குரங்கும் சும்மா தான் பிறந்தான். இருக்கும் வரை ஆடிவிட்டு போய் சேர வேண்டியதுதான். குரங்கிற்கு எதற்கு வீண் கேள்விகள்?

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.